::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, December 26, 2009

நமதூரில் தமிழக அரசின் 24மணி நேர 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

கடந்த 22/12/2009 வியாழன் அன்று காலை சுமார் 11.00 மணியளவில் கூத்தாநல்லூா் ‌செல்வி மஹால் திருமண அரங்கத்தில் நமதூருக்கான தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு மின்வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் திரு. பூண்டி கலைவாணன் அவர்கள் துவக்கி வைத்தார்.

இத்துவக்கவிழாவிற்கு கூத்தாநல்லூா் நகர்மன்ற தலைவர் ஜனாபா. யாஸ்மீன் பர்வீன், நகா்மன்ற துணைத் தலைவா் ஜனாப். காதா் உசேன் மற்றும் நகராட்சி ஆணையா் திரு.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில் கூத்தாநல்லூா் ஊர்உறவின் முறை ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாய ஆர்வலா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

பலரது உயிர்காக்கும் இச்சேவையை திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் பலமான கோரிக்கை மூலம் பெற்றுத் தந்த நமதூா் நகா்மன்ற துணைத் தலைவா் ஜனாப். காதா் உசேன் அவர்களுக்கு நமது இணையதள குழுவின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவசர தேவைக்கு 108 எண்ணில் ‌தொலைபேசி வழியாக தொடா்பு கொள்ளவும்.
நமதூர் நகராட்சி முன்புறம் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் 24 மணிநேரமும்...







வௌ்ளிக்கிழமை (25 டிசம்பர்) ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு வெளியான துண்டு பிரசுரங்கள்













Wednesday, December 16, 2009

காப்​பீட்​டுத் திட்​டம்:​ விடு​பட்​ட​வர்​க​ளுக்கு புகைப்​ப​டம் எடுக்க மீண்​டும் வாய்ப்பு

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் கலை​ஞர் மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தில் புகைப்​ப​டம் எடுத்​துக் கொள்​ளா​மல் விடு​பட்​ட​வர்​க​ளுக்கு மீண்​டும் எடுத்​துக் கொள்ள வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.​​ ​ ​

இது​கு​றித்து ஆட்​சி​யர் எம்.​ சந்​தி​ர​சே​க​ரன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​கு​றிப்பு:​​ ​ ​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ஆண்டு வரு​மா​னம் ரூ.72,000-த்துக்​கும் குறை​வாக உள்ள ஏழை,​​ எளிய மக்​க​ளுக்​கா​க​வும்,​​ 26 நல​வா​ரி​யங்​க​ளில் உறுப்​பி​னர்​க​ளா​க​வும் உள்​ள​வர்​க​ளுக்கு 51 வகை​யான நோய்​க​ளுக்கு தனி​யார் மருத்​து​வ​ம​னை​க​ளில் ஆண்​டுக்கு ரூ.1 லட்​சம் மதிப்​பில் உயர் சிகிச்​சைப் பெறு​வ​தற்கு ஏது​வாக தமி​ழக அரசு உயிர் காக்​கும் உயர் சிகிச்​சைக்​கான கலை​ஞர் காப்​பீட்​டுத் திட்​டத்தை அறி​வித்​துள்​ளது.​​ ​ ​

இதன்​படி,​​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ஏற்​க​னவே அடை​யாள அட்டை வழங்​கு​வ​தற்​காக 2,52,570 குடும்​பங்​கள் புகைப்​ப​டம் எடுக்​கப்​பட்டு,​​ இது​வரை 1,97,790 பேருக்கு அடை​யாள அட்​டை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.​​ ​ ​

மேலும் முதல் சுற்​றில் விடு​பட்​ட​வர்​க​ளுக்​காக மாவட்​டம் முழு​வ​தும் இரண்​டாம் சுற்று புகைப்​ப​டம் எடுக்​கும் பணி தொடங்​க​பட்​டுள்​ளது.​ இதன்​படி,​​ குட​வா​சல் வட்​டத்​தில் டிச.16-ம் தேதி​யும்,​​ நன்​னி​லம் வட்​டத்​தில் டிச.17 முதல் 19-ம் தேதி வரை​யி​லும்,​​ வலங்​கை​மான் வட்​டத்​தில் டிச.20,21 தேதி​க​ளி​லும்,​​ நீடா​மங்​க​லம் வட்​டத்​தில் டிச.22 முதல் 24-ம் தேதி வரை​யி​லும்,​​ திருத்​து​றைப்​பூண்டி வட்​டத்​தில் டிச.25 முதல் டிச.​ 27-ம் தேதி வரை​யி​லும்,​​ திரு​வா​ரூர் வட்​டத்​தில் டிச.​ 28,​ 29 தேதி​க​ளி​லும் அந்​தந்த கிரா​மம் அல்​லது அரு​கி​லுள்ள கிராம பள்​ளி​க​ளில் புகைப்​ப​டம் எடுக்​கும் பணி நடை​பெ​றும்.​​ ​ ​

முதல் சுற்​றில் புகைப்​ப​டம் எடுக்​கா​மல் விடு​பட்ட நபர்​கள் இந்த வாய்ப்​பைப் பயன்​ப​டுத்தி குடும்​பத்​து​டன் வந்து புகைப்​ப​டம் எடுத்​துக் கொள்​ளு​மாறு ஆட்​சி​யர் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.​

-நன்றி/ தினமணி.காம்

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடர் மழை,​​ புயல் எச்​ச​ரிக்கை கார​ண​மாக,​​ திருவாரூர் மாவட்​டத்​தில் ​ இயல்பு வாழ்க்​கை​யில் பாதிப்பு ஏற்​பட்​டது.​

திருவாரூர் மாவட்​டத்​தில் கடந்த 4 ​ நாள்​க​ளா​கத் தொடர்ந்து மழை பெய்து வரு​கி​றது.​ வங்​கக் கட​லில் புயல் உரு​வா​ன​தை​ய​டுத்து,​​ சனிக்​கி​ழமை முதல் செவ்​வாய்க்​கி​ழமை வரை நாகை துறை​முக அலு​வ​ல​கத்​தில் 3-ம் எண் புயல் எச்​ச​ரிக்​கைக் கூண்டு ஏற்​றப்​பட்​டி​ருந்​தது.​ பிற்​ப​கல் இந்த எச்​ச​ரிக்​கைக் கூண்டு இறக்​கப்​பட்​டது.​​ ​

இருந்​த​போ​தி​லும்,​​ திருவாரூர் மாவட்​டத்​தின் அனைத்​துப் பகு​தி​க​ளி​லும் தொடர்ந்து பலத்த மழை பெய்​தது.​ தொடர் மழை நீடிப்​ப​தால் திருவாரூர் மாவட்​டத்​தின் அனைத்​துப் பகு​தி​க​ளி​லும் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டி​ருந்​தது.​ ​ மாவட்​டத்​தின் ஒரு சில பகு​தி​க​ளில் போக்​கு​வ​ரத்​தில் பிரச்னை ஏற்​பட்​டது.​

​பள்​ளி​க​ளுக்கு ​ விடு​முறை:​​ புயல் எச்​ச​ரிக்கை மற்​றும் தொடர் மழை கார​ண​மாக திருவாரூர் மாவட்​டத்​தில் பள்ளி,​​ கல்​லூரி உள்​ளிட்ட அனைத்​துக் கல்வி நிலை​யங்​க​ளுக்​கும் செவ்வாய்க்கிழமை ​(டிச.​ 15) விடு​முறை அறி​விக்​கப்​பட்​டிருந்தது.​

அதிரடி குறைந்த கட்டணத்தில் உம்ரா (ரூ.39000/-) தக்பீர் ஹஜ் சர்வீஸ்

குவைத் K-Tic வழங்கும் முப்பெரும் முத்தான நிகழ்ச்சிகள்

Tuesday, December 15, 2009

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ​பள்​ளி​க​ளுக்கு இன்று விடு​முறை

புயல் எச்​ச​ரிக்கை கார​ண​மாக,​​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ​ பள்​ளி​க​ளுக்கு செவ்​வாய்க்​கி​ழமை விடு​முறை அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.​​ ​ ​

தென்​மேற்கு வங்​கக்​கட​லில் ஆழ்ந்த காற்​ற​ழுத்​தத் தாழ்வு நிலை கடந்த இரு தினங்​க​ளுக்கு மேலாக நிலை கொண்​டுள்​ளது.​ இத​னால் கடந்த இரு தினங்​க​ளாக திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் பர​வ​லாக மழை​பெய்து வரு​கி​றது.​ தொடர்ந்து திங்​கள்​கி​ழ​மை​யும் அதி​காலை தொடங்கி பகல் முழு​வ​தும் வானம் மேக​மூட்​டத்​து​டனே காணப்​பட்​டது.​ தொடர்ந்து மழை பெய்து கொண்​டே​யி​ருந்​தது.​ அவ்​வப்​போது லேசாக வெயில் அடித்​தது.​​ ​ ​ ​

விடு​முறை குறித்து மாவட்ட ஆட்​சி​யர் எம்.​ சந்​தி​ர​சே​க​ரன் வெளி​யிட்​டுள்ள செய்தி:​ ​​ ​ ​ புயல் செவ்​வாய்க்​கி​ழமை கரையை கடக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​ப​டு​வ​தால் செவ்​வாய்க்​கி​ழமை திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் மழை அதிக அள​வில் இருக்​கு​மெ​ன​வும்,​​ பலத்த காற்​றும் வீசக்​கூ​டும் என​வும் வானிலை ஆய்வு மையம் அறி​வித்​துள்​ளது.​ ​ ​ ​ மேலும் கடல் சீற்​றம் அதி​க​மாக இருக்​கும் என்​ப​தால்,​​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த மீன​வர்​கள் செவ்​வாய்க்​கி​ழமை கட​லுக்​குச் செல்ல வேண்​டா​மென அறி​வு​றுத்​தப்​பட்​டுள்​ள​னர்.​​ ​ ​

மழை,​​ காற்று அதி​க​மாக இருக்​கு​மென எதிர்​பார்க்​கப்​ப​டு​வ​தால் செவ்​வாய்க்​கி​ழமை ஒரு​நாள் மட்​டும் இம்​மா​வட்​டத்​தில் உள்ள பள்​ளி​க​ளுக்கு விடு​முறை அளிக்​கப்​ப​டு​கி​றது.​ பள்​ளி​க​ளில் பல்​வேறு வகுப்​பு​க​ளுக்கு நடை​பெ​றும் அரை​யாண்​டுத் தேர்​வு​கள் வேறொரு நாளில் நடத்​தப்​ப​டும் என ஆட்​சி​யர் தெரி​வித்​துள்​ளார்.

Monday, December 14, 2009

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் 2-வது நாளாக பர​வ​லாக மழை

வங்​கக் கட​லில் ஏற்​பட்​டுள்ள காற்​ற​ழுத்த தாழ்வு நிலை கார​ண​மாக திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் 2-வது நாளாக ஞாயிற்​றுக்​கி​ழ​மை​யும் பர​வ​லாக மழை பெய்​தது.​ ​ ​ ​

தென்​மேற்கு வங்​கக் கட​லில் ஆழ்ந்த காற்​ற​ழுத்​தத் தாழ்வு நிலை கடந்த இரு தினங்​க​ளாக நிலை கொண்​டுள்​ளது.​ இத​னால்,​​ சனிக்​கி​ழ​மையை தொடர்ந்து ஞாயிற்​றுக்​கி​ழ​மை​யும் காலை முதலே வானம் மேக மூட்​டத்​து​டன் காணப்​பட்​டது.​ சில நேரங்​க​ளில் நல்ல வெயில் அடித்​தது.​ சிறிது நேரத்​தில் திடீ​ரென மழை பெய்​தது.​

Sunday, December 13, 2009

வங்​கக்​கட​லில் குறைந்த காற்​ற​ழுத்​தத் தாழ்வு நிலை

தென்​மேற்கு வங்​கக்​க​டல் அரு​கில் குறைந்​தத காற்​ற​ழுத்​தத் தாழ்வு மண்​டல நிலை கொண் ​டுள்​ளது.​ இத​னால் வானம் மேக​மூட்​டத்​து​டன் 23 டிகிரி வெப்​ப​நிலை உரு​வா​கும்.​ மேலும் 45 முதல் 55 கிலோ மீட்​டர் வேகத்​து​டன் காற்று வீசக்​கூ​டும்.​

தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி தெற்கு கடல்​க​ரை​யோர மாவட்​டங்​க​ளி​லும்,​​ மாநி​லத்​தின் உள்​ப​கு​தி​யி​லும் அடுத்த 48 மணி நேரத்​தில் மித​மா​னது முதல் கனத்த மழை பெய்​யக் கூடும்.​ கடல் கொந்​த​ளிப்​பு​ட​னும்,​​ சீற்​றத்​து​ட​னும் காணப்​ப​டும்.​​ ​ ​ இத​னால் மீன​வர்​கள் கட​லுக்​குச் செல்ல வேண்​டா​மென அறி​வு​றுத்​தப்​பட்​டுள்​ள​னர்.​

தாழ்​வான பகு​தி​க​ளில் வசிப்​ப​வர்​கள் பாது​காப்​பான இடங்​க​ளில் இருக்க வேண்​டும்.​ ​மேலும் தீய​ணைப்​புத் துறை,​​ வரு​வாய்த் துறை,​​ பொதுப்​ப​ணித் துறை ஆகிய முக்​கிய துறை​கள் மூலம் பாது​காப்பு நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுóள்​ளது.​​ ​

தேவை​யான அள​வுக்கு உண​வுப் பொருள்​கள்,​​ மருத்​து​வப் பொருள்​கள் இருப்​பில் வைக்​கப்​பட்​டும்,​​ பள்ளி,​​ கல்​லூரி கட்​ட​டங்​க​ளில் பொது​மக்​கள் பாது​காப்​பாக தங்க வைக்க தேவை​யான ஏற்​பா​டு​க​ளும் செய்​யப்​பட்​டுள்​ளன.​ எந்த ஒரு இடர்​பாடு ஏற்​பட்​டா​லும் எதிர்​கொள்ள மாவட்ட நிர்​வா​கம் தயா​ராக உள்​ளது என ஆட்​சி​யர் தெரி​வித்​துள்​ளார்.

Friday, December 11, 2009

செல்பேசி பேசிக் கொண்டு வாக​னம் ஓட்டினால் கடும் நடவடிக்கை

செல்​பே​சி​யில் பேசிக் கொண்டே வாக​னங்​களை ஓட்​டு​ப​வர்​கள் மீது காவல் துறை மூலம் நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டு​மென மாவட்ட ஆட்​சி​யர் எம். சந்​தி​ர​சே​க​ரன் எச்​ச​ரித்​துள்​ளார்.​ ​ ​

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் சாலை​க​ளில் இரு​சக்​கர மற்​றும் மூன்று,​ நான்கு சக்​கர வாக​னங்​களை ஓட்​டிச் செல்​லும் பொது​மக்​கள் மற்​றும் ஓட்​டு​நர்​கள் வாக​னங்​களை ஒரு கையால் இயக்​கிக் கொண்டே மற்​றொரு கையில் ​ செல்​பே​சியை வைத்​துக் கொண்டு அதில் பேசிக் கொண்டு செல்​வ​தாக புகார்​கள் வந்​த​வண்​ணம் உள்​ளன.​ ​ ​

ஒரு சில​ரின் இது​போன்ற நட​வ​டிக்​கை​கள் கார​ண​மாக சாலை​யில் கவ​னம் சிதறி விபத்​து​க​ளும்,​ போக்​கு​வ​ரத்து நெரி​சல் மற்​றும் இதர வாகன ஓட்​டு​நர்​க​ளுக்கு இடை​யூ​று​க​ளும் ஏற்​ப​டு​கின்​றன.​ ​ ​ ​

எனவே,​ சாலை​க​ளில் வாக​னங்​களை இயக்​கு​ப​வர்​கள் செல்​பே​சி​யில் பேசிக் கொண்டே வாக​னங்​களை இயக்​கி​னால் அவர்​கள் மீது காவல்​துறை மூலம் சட்​டப்​ப​டி​யான நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என ஆட்​சி​யர் எம். சந்​தி​ர​சே​க​ரன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​கு​றிப்​பில் எச்​ச​ரித்​துள்​ளார்.

நக‌ர்‌ப்​பு​ற‌ங்​க​ளி‌ல் வசி‌க்​கு‌ம் ஏழ‌ைக​ளு‌க்கு ​ வீடு க‌ட்ட கட​னு​தவி :​ ஆ‌ட்​சி​ய‌ர்

திரு​வ‌ா​ரூ‌ர் ம‌ாவ‌ட்​ட‌த்​தி‌ல் நக‌ர்​பு​ற‌ங்​க​ளி‌ல் வசி‌க்​கு‌ம் இது​வ‌ரை ‌சொந்த வீடு இ‌ல்​ல‌ாத ஏழ‌ைக​ளு‌க்கு வீடு​க‌ட்ட கட​னு​தவி வழ‌ங்​க‌ப்​ப​ட​வு‌ள்​ளது என ம‌ாவ‌ட்ட ஆ‌ட்​சி​ய‌ர் எ‌ம்.​ ச‌ந்​தி​ர​‌சே​க​ர‌ன் ‌தெரி​வி‌த்​து‌ள்​ள‌ார்.

இது​கு​றி‌த்து அவ‌ர் ‌வெளி​யி‌ட்​டு‌ள்ள ‌செ‌ய்​தி‌க்​கு​றி‌ப்பு:​​ ​ ​ நக‌ர்‌ப்​பு​ற‌ங்​க​ளி‌ல் வசி‌த்து வரு‌ம் இது​வ‌ரை ‌சொ‌ந்த வீடு இ‌ல்​ல‌ாத மாத வரு​மா​ன‌ம் ரூ.3,000-‌த்து‌க்​கு‌ள் உ‌ள்ள ‌பொரு​ளா​தா​ர‌த்​தி‌ல் மிக​வு‌ம் நலி​வ​‌டை‌ந்த ஏழ‌ை ம‌க்​க​ளு‌க்கு 25 சதுர மீ‌ட்​ட‌ர் பர‌ப்​ப​ள​வி‌ல் வீடு க‌ட்​டி‌க் ‌கொ‌ள்ள,​​ வ‌ங்​கி‌க் கட​ன் ரூ.1 ல‌ட்​ச‌ம் வ‌ரை​யி​லு‌ம்,​​ ம‌ாத வரு​ம‌ா​ன‌ம் ரூ.3,301 முத‌ல் ரூ.7,300 வ‌ரை கு‌றை‌ந்த வரு​வ‌ா‌ய்‌ப்​பி​ரிவு
ஏழ‌ை ம‌க்​க​ளு‌க்கு 40 சதுர மீ‌ட்​ட‌ர் பர‌ப்​ப​ள​வி‌ல் வீடு க‌ட்​டி‌க் ‌கொ‌ள்ள,​​ வ‌ங்​கி‌க் கட​ன் ரூ.1.60 ல‌ட்​ச‌ம் கட‌ன் வழ‌ங்​க​வு‌ம்,​​ கட‌ன் ‌தொ‌கை மீத‌ான வ‌ட்​டி​யி‌ல் 5 சத​வீத ம‌ானி​ய‌ம் வழ‌ங்​க​வு‌ம்,​​ ​ இ‌ந்த கட‌ன் ‌தொ‌கை‌யை 15 முத‌ல் 20 ஆ‌ண்​டு​க​ளி‌ல் திரு‌ம்ப ‌செலு‌த்​த​வு‌ம் அரசு அறி​வி‌த்​து‌ள்​ளது.​​ ​ ​

இ‌ந்த தி‌ட்​ட‌த்​தி‌ன் கீ‌ழ் திரு​வ‌ா​ரூ‌ர் ம‌ாவ‌ட்​ட‌த்​தி‌ல் தமி‌ழ்​நாடு அரசு பி‌ற்​ப​டு‌த்​த‌ப்​ப‌ட்​‌டோ‌ர் ம‌ற்​று‌ம் மிக​வு‌ம் பி‌ற்​ப​டு‌த்​த‌ப்​ப‌ட்​‌டோ‌ர் நல‌த்​து‌றை மூல‌ம் நக‌ர்‌ப்​பு​ற‌ங்​க​ளி‌ல் ​(நக​ர‌ாட்சி ம‌ற்​று‌ம் ‌பேரூ​ர‌‌ாட்சி பகு​தி​க‌ள் ம‌ட்​டு‌ம்)​ நில‌ம் ‌தே‌ர்வு ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்டு,​​ இல​வச வீ‌ட்​டு​ம​‌னை‌ப் ப‌ட்ட‌ா வழ‌ங்​க‌ப்​ப‌ட்டு,​​ இது​வ‌ரை அ‌ந்த இட‌த்​தி‌ல் வீடு க‌ட்​டி‌க் ‌கொ‌ள்​ளாத நப‌ர்​க‌ள் வ‌ங்​கி‌க் கட‌ன் ‌பெ‌ற்று வீடு க‌ட்​டி‌க் ‌கொ‌ள்​ள​ல‌ாம்.​ ​​ ​ ​

இ‌ந்த தி‌ட்​ட‌த்​தி‌ன் கீ‌ழ் பய​ன​‌டைய விரு‌ம்​பு​‌வோ‌ர் திரு​வ‌ாரூ‌ர் மாவ‌ட்ட பி‌ற்​ப​டு‌த்​த‌ப்​ப‌ட்ட ம‌ற்​று‌ம் சிறு​பா‌ன்​‌மை​யி​ன‌ர் நல அலு​வ​ல‌ரை ‌நேரி‌ல் அணு​கு​மாறு ஆ‌ட்​சி​ய‌ர் எ‌ம்.​ ச‌ந்​தி​ர​‌சே​க​ர‌ன் ‌கே‌ட்​டு‌க் ‌கொண்​டு‌ள்​ள‌ார்.

Tuesday, December 8, 2009

திரு​வாரூரில் தமு​முக,​ தவ்​ஹீத் ஜமாஅத் ஆர்ப்​பாட்​டம்

பாபர் மசூதி இடிக்​கப்​பட்ட தின​மான டிச. 6-ம் தேதி​யை​யொட்டி,​ தமி​ழக முஸ்​லிம் முன்​னேற்​றம் கழ​கம்,​ தமிழ்​நாடு தவ்​ஹீத் ஜமாத் சார்​பில் திரு​வா​ரூரில் ஞாயிற்​றுக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டங்​கள் நடை​பெற்​றன.​ ​ ​

கோரிக்​கை​கள்:​ பாபர் மசூ​தியை அதே இடத்​தில் கட்ட அனு​ம​திக்க வேண்​டும். பாபர் மசூதி இடிக்​கப்​பட்ட போது அப்​போ​தைய காங்​கி​ரஸ் அரசு அளித்த வாக்​கு​று​தியை தற்​போ​தைய காங்​கி​ரஸ் அரசு நிறை​வேற்ற வேண்​டும். பாபர் மசூதி இடத்தை முஸ்​லிம்​க​ளி​டம் ஒப்​ப​டைக்க வேண்​டும். பாபர் மசூதி இடிப்​பில் குற்​றஞ்​சாட்​டப்​பட்​ட​வர்​க​ளுக்கு உட​ன​டி​யாக தண்​டனை வழங்க வேண்​டும் என்​பன உள்​ளிட்​டக் கோரிக்​கை​கள் வலி​யு​றுத்​தப்​பட்​டன.​ ​​

தமு​முக சார்​பில்... ​ திரு​வா​ரூர் ரயில் நிலை​யம் அருகே நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு மாவட்ட துணைச் செய​லர் ஓய். சாதிக் பாட்ஷா ​ தலைமை வகித்​தார். மாநில துணைத் தலை​வர் ஹாஜா குத்​பு​தீன் சிறப்​பு​ரை​யாற்​றி​னார். மாவட்​டச் செய​லர் குத்​பு​தீன் மற்​றும் மாவட்ட நிர்​வா​கி​கள்,​ கிளை நிர்​வா​கி​கள் ஏரா​ள​மா​னோர் பங்​கேற்​ற​னர்.​

தவ்​ஹீத் ஜமாஅத்:​ ​ ​ திரு​வா​ரூர் தலைமை அஞ்​சல் அலு​வ​ல​கம் முன்பு நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு மாவட்​டச் செய​லர் எச். பீர்​மு​க​மது தலைமை வகித்​தார். மாநி​லப் பேச்​சா​ளர் கோவை அப்​துல் ரகீம் சிறப்​பு​ரை​யாற்​றி​னார். மாவட்​டப் பொரு​ளாலர் எஸ்.எம். ஹாஜா மைதீன் மற்​றும் மாவட்ட நிர்​வா​கி​கள்,​ கிளை நிர்​வா​கி​கள் ஏரா​ள​மா​னோர் பங்​கேற்​ற​னர்.​

ஆர்ப்​பாட்​டத்​தில் ஏரா​ள​மா​னோர் பங்​கேற்​ற​னர்.

Saturday, December 5, 2009

தலை​மைத் தேர்​தல் அலு​வ​ல​ரு​டன் திருவாரூர் ஆட்​சி​யர் கலந்​து​ரை​யா​டல்

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் விடு​பட்ட வாக்​கா​ளர் சேர்த்​தல் மற்​றும் நூறு சத​வீத வாக்​கா​ளர் பட்​டி​யல் கள ஆய்​வுப் பணி ஆகி​ய​வற்றை விடியோ கான்​பி​ரன்​சிங் மூலம் தமி​ழக தலை​மைத் தேர்​தல் அலு​வ​லர் நரேஷ் குப்தா வெள்​ளிக்​கி​ழமை ஆய்வு மேற்​கொண்​டார்.​ ​ ​

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் உள்ள திருத்​து​றைப்​பூண்டி,​ மன்​னார்​குடி,​ திரு​வா​ரூர்,​ நன்​னி​லம் ஆகிய நான்கு சட்​டப்​பே​ர​வைத் தொகு​தி​க​ளுக்​கான வாக்​கா​ளர் ப்ட​டி​யல்​க​ளைத் திருத்​தி​ய​மைக்​கும் பணி விரை​வில் தொடங்​கப்​ப​ட​வுள்​ளது. இதன் ஒரு கட்​ட​மாக,​ இன்​னும் ஒரு​வார காலத்​தில்,​ கிராம நிர்​வாக அலு​வ​லர்​கள் வாக்​கா​ளர் பட்​டி​ய​லு​டன் வீடு​தோ​றும் சென்று,​ வாக்​கா​ளர் பட்​டிய​லில் உள்ள விவ​ரங்​கள் சரி​யாக உள்​ளதா என்​பதை கள ஆய்வு மேற்​கொள்​ள​வுள்​ள​னர்.​ ​ ​ இது​தொ​டர்​பான பணி​க​ளில் ஏற்​பட்​டுள்ள முன்​னேற்​றம் குறித்து தலை​மைத் தேர்​தல் அலு​வ​லர் நரேஷ்​குப்தா மாவட்ட ஆட்​சி​யர் எம். சந்​தி​ர​சே​க​ர​னு​டன் விடியோ கான்​பி​ரன்​சிங் மூலம் ஆய்வு மேற்​கொண்​டார்.​ ​

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் ​ அ. ஜான்​லூ​யிஸ்,​ மன்​னார்​குடி மற்​றும் திரு​வா​ரூர் வரு​வாய் கோட்​டாட்​சி​யர்​கள்,​ துணை ஆட்​சி​யர் நிலை​யி​லான மண்​டல அலு​வ​லர்​கள்,​ அனைத்து வட்​டாட்​சி​யர்​கள் மற்​றும் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​லக தேர்​தல் வட்​டாட்​சி​யர் உள்​ளிட்​டோர் உட​னி​ருந்​த​னர்.

ஏ.கே.எஸ். விஜ​யன் எம்.பி.க்கு புதிய பதவி

நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் தொகுதி மேம்​பாட்டு நிதி அம​லாக்க கமிட்​டி​யின் தலை​வ​ராக நாகை மக்​க​ள​வைத் தொகுதி உறுப்​பி​னர் ஏ.கே.எஸ். விஜ​யன் நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார். ​ ​

நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் 24 பேரை கொண்ட இந்த கமிட்டி,​ நாடு ​ முழு​வ​தும் ​ நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​க​ளின் மேம்​பாட்டு நிதி மூலம் செய்​யப்​ப​டும் பணி​க​ளைக் கண்​கா​ணித்​தல்,​ மற​றும் அந்த திட்​டத்​தின் பயன்​கள் மக்​களை முழு​மை​யா​கச் சென்​ற​டை​யும் வகை​யில் உரிய மாற்​றங்​க​ளைக் கொண்டு வரு​தல் உள்​ளிட்ட பணி​களை மேற்​கொள்​ளும். இந்த கமிட்​டி​யின் அலு​வ​ல​கம் நாடா​ளு​மன்ற வளா​கத்​தி​லேயே உள்​ளது.​ ​ ​

இந்த பத​வி​யின் மூல​மாக நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் தொகுதி மேம்​பாட்டு நிதி​யின் மூல​மாக செயல்​ப​டுத்​தப்​ப​டும் பணி​கள் அனைத்​தி​லும் கிரா​மப்​புற மேம்​பாடு மற்​றும் கல்வி மேம்​பாட்​டுக்கு உயர் முன்​னு​ரிமை அளிக்​கப்​ப​டும் என்​றார் விஜ​யன்.​ ​ ​

நாகை மக்​க​ளவை தொகு​தி​யில் மூன்​றா​வது முறை​யாக உறுப்​பி​ன​ராக தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​ட​வர் விஜ​யன்.

Wednesday, December 2, 2009

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பரவலாக நல்ல மழை பெய்தது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, கடலோர மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நன்னிலத்தில் 30.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மாவட்டம் முழுவதும் மழை விட்டு, விட்டு பெய்வதாலும், சீராக பெய்வதாலும் சம்பா, தாளடி பயிர்களுக்கு இந்த மழை நல்ல ஊட்டமளிப்பதாக இருக்கும் என வேளாண் துறையினர் தெரிவித்தனர். எனினும் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

- நன்றி / தினமணி.காம்

Wednesday, November 25, 2009

வேன் - பைக் மோதல்: பூதமங்கலம் வாலிபர் மரணம்

திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டடக் கட்டுமானப் பிரிவின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டடக் கட்டுமானப் பணிகளை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

கூத்தாநல்லூரில் தீயணைப்பு நிலையக் கட்டடக் கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியர் எம். சந்திரசேகரன் அங்கு தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார் பம்பு மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார்.

ஆய்வின் போது பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் இரா. பாஸ்கரன், வட்டாட்சியர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் எம். சந்திரசேகரன் உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 142 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் தொடர்புடைய அலுவலர்களை உடன் அழைத்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த தகுதியுடைய நபர்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் அட்டை வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் அலுவலர்களை நம்பி, தங்கள் தேவைகள் குறித்து மனு செய்கின்றனர். எனவே அரசு அலுவலர்கள் அந்த மனுக்களை மனுதாரர் நிலையிலிருந்து பரிசீலித்து உடன் நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே மனுக்கள் பெற வேணடும் என்றார் ஆட்சியர்.

Monday, November 23, 2009

அரசின் திட்டங்களை சிறுபான்மையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் தினம் கொண்டாடப்பட்டது.

விழாவுக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி, தேசிய ஒருமைப்பாடு வாரம் கொண்டாடப்படுகிறது. இதன்படி உறுதிமொழி ஏற்பு, சிறுபான்மையினர் தினம், மனித நேய வார விழா, கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழக அரசு குழந்தைகள், மாணவ, மாணவிகள், திருமண வயதுள்ள பெண்கள், முதியோர்கள் என அனைவருக்கும் தேவையான பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினருக்கு அவர்களது நலன் கருதி தொழில் செய்ய கடனுதவி, கல்வியில் இட ஒதுக்கீடு மற்றும் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத் திட்டங்களை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

Thursday, November 12, 2009

10 லட்சம் 'இலவச விமான டிக்கெட்டுகள்' வழங்கும் ஏர் ஆசியா!

கோலாலம்பூர்: உலகின் மிகக் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம் என்ற விளம்பரத்தை தீவிரப்படுத்தியுள்ள ஏர் ஆசியா, பயணிகளுக்கு அதிரடிச் சலுகையாக 10 லட்சம் இலவச டிக்கெட்டுகளை வழங்குகிறது.

ஏர் ஆசியா விமானங்கள் செல்லும் அனைத்து நாடுகளுக்கும் இந்த இலவச டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த டிக்கெட்டுகளை ஏர் ஆசியாவின் இணையதளத்தில் பதிவு செய்து பெற வேண்டும். நவம்பர் 11-ம் தேதி துவங்கிய இந்த முன்பதிவு வரும் நவம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை நீடிக்கிறது. இந்த டிக்கெட்டுகள் மூலம் வரும் மே 10, 2010 முதல் அக்டோபர் 10ம் தேதி வரை பயணம் செய்ய முடியும்.

இந்த இலவச டிக்கெட் அறிவிப்பால் 11 -ம் தேதி மட்டும் இந்த விமான நிறுவனத்தின் தளத்துக்கு 300 மில்லியன் ஹிட்ஸ் கிடைத்ததாக ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.

முதல்நாள் மட்டும் 3 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாம். எரிபொருள் கட்டணம், விமானக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்றாலும், விமான நிலையக் கட்டணம், சீட் கட்டணம் என அடிப்படைக் கட்டணங்களை வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து திருச்சி, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கொல்கத்தாவிலிருந்து இந்த விமான சேவையைப் பெற முடியும். சென்னைக்கு இந்த விமான சேவை இல்லை.

- நன்றி/தட்ஸ்தமிழ்.com

கனமழை எதிரொலி - காய்கறி விலை உயர்வு

Saturday, November 7, 2009

தொடரும் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக பெய்து வரும் மழையால் ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, அக்.28-ம் தேதி இரவு முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் புதன்கிழமை முழுவதும் பெய்த மழை காரணமாக வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை பகலில் விட்டு, விட்டு தூறல் விழுந்தவண்ணம் இருந்தது. வியாழக்கிழமை இரவு முழுவதும் மழை தொடர்ந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து மழைத் தூறல்கள் இருந்தது. பிற்பகலில் லேசான வெயில் அடித்தது. பெரும்பாலான நேரங்களில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.

Saturday, October 31, 2009

பருவ மழை : பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூர் மாவட்டத்தில் பல மாதங்களுக்குப் பிறகு நல்ல மழை பெய்ததால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதன்கிழமை இரவு முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவாரூரில் 45.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மற்ற இடங்களில் பெய்த மழை அளவுகள் வருமாறு (அளவு மில்லி மீட்டரில்): முத்துப்பேட்டை - 43.2, குடவாசல் - 34, திருத்துறைப்பூண்டி - 18.6, நீடாமங்கலம் - 14, மன்னார்குடி - 11.2, கூத்தாநல்லூர் - 19.7, நன்னிலம் - 10.3 அளவில் மழை பதிவானது.

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக வியாழக்கிழமை பகலிலும் விட்டு, விட்டு நல்ல மழை பெய்தது. வடகிழக்குப் பருவ மழையும் காலத்தில் தொடங்காத நிலையில், இப்போது பெய்துள்ள இந்த மழையால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Monday, October 12, 2009

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பயனுள்ள தகவல்களை பொதுமக்கள் பெற வேண்டும்

அரசிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பயனுள்ள தகவல்களை பொதுமக்கள் பெற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக். 6 முதல் அக்.12-ம் தேதி வரை தகவல் அறியும் உரிமை வார விழா கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பான கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், பொது அதிகார அமைப்புகளில் ஒளிவுமறைவற்ற நிர்வாகத்துக்கான தகவல்களை பொதுமக்கள் கேட்டு பெறலாம். இந்தச் சட்டத்தின் மூலம், முழுமையாக, முறையாக, பயனுள்ள தகவல்களை மக்கள் பெற வேண்டும். இந்தச் சட்டம் குறித்து அரசு அலுவலர்களும், தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர்.

- நன்றி/தினமணி.காம்

Monday, September 28, 2009

பிள்ளைகளை அடித்தால் அறிவுக்கூர்மை குறையும்!

பிள்ளைகளை அதிகளவில் அடித்தால் அவர்களின் அறிவுக்கூர்மை மழுங்கி விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கலை. பெரும்பாலான பெற்றோர்களுக்கு அது தெரிவதில்லை. எதற்கெடுத்தாலும் அடி, உதை... குத்துதான். படிக்கவில்லையா? சொன்ன பேச்சு கேட்கவில்லையா? தலையில் நாலு குட்டு...! முதுகுல நாலு குத்து...!! பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர பெற்றோர்கள் கொடுக்கும் ராஜ வைத்தியம் இதுதான். ஆனால், பெற்றோரின் இந்த தண்டனை மனப்பான்மையால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே பழாகிவிடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.

நியூ ஹம்ஷையர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முதன்மை விஞ்ஞானி முர்ரே ஸ்டரஸ் தலைமையிலான குழு, பெற்றோரால் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகள் என்ற ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இதற்காக 1,500 பிள்ளைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பாதி பேர் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்டவர்கள். மற்றவர்கள் 5 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவர்களில் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகளுக்கு, மற்ற பிள்ளைகளை விட அறிவுக்கூர்மை குறைவாக இருப்பது தெரிய வந்தது. உதை வாங்கும் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட அறிவுக்கூர்மை 5 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், 4 முதல் 9 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் அறிவுக்கூர்மை 2.8 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பெற்றோர்களை பிள்ளைகளை அடித்து வளர்ப்பதைவிட அன்பால் அரவணைத்து வளர்ப்பதே சிறந்தது.

- நன்றி/தினகரன்.காம்

Sunday, September 20, 2009

ரமளான் துஆ - பிறை 30

Ramadan Dua: DAY 30
supplication
O ALLAH, on this day, make my fasts worthy of appreciation and acceptance, according to what pleases You, and pleases the Messenger, the branches being strengthened by the roots, for the sake of our leader, Muhammad, and his purified family. Praise be to ALLAH, the Lord of the worlds.

Blog Archive