::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, November 25, 2009

திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டடக் கட்டுமானப் பிரிவின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டடக் கட்டுமானப் பணிகளை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

கூத்தாநல்லூரில் தீயணைப்பு நிலையக் கட்டடக் கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியர் எம். சந்திரசேகரன் அங்கு தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார் பம்பு மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார்.

ஆய்வின் போது பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் இரா. பாஸ்கரன், வட்டாட்சியர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Blog Archive