திருவாரூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டடக் கட்டுமானப் பிரிவின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டடக் கட்டுமானப் பணிகளை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
கூத்தாநல்லூரில் தீயணைப்பு நிலையக் கட்டடக் கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியர் எம். சந்திரசேகரன் அங்கு தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார் பம்பு மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார்.
ஆய்வின் போது பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் இரா. பாஸ்கரன், வட்டாட்சியர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூத்தாநல்லூரில் தீயணைப்பு நிலையக் கட்டடக் கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியர் எம். சந்திரசேகரன் அங்கு தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார் பம்பு மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார்.
ஆய்வின் போது பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் இரா. பாஸ்கரன், வட்டாட்சியர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.