பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் எம். சந்திரசேகரன் உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 142 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் தொடர்புடைய அலுவலர்களை உடன் அழைத்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த தகுதியுடைய நபர்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் அட்டை வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் அலுவலர்களை நம்பி, தங்கள் தேவைகள் குறித்து மனு செய்கின்றனர். எனவே அரசு அலுவலர்கள் அந்த மனுக்களை மனுதாரர் நிலையிலிருந்து பரிசீலித்து உடன் நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே மனுக்கள் பெற வேணடும் என்றார் ஆட்சியர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 142 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் தொடர்புடைய அலுவலர்களை உடன் அழைத்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த தகுதியுடைய நபர்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் அட்டை வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் அலுவலர்களை நம்பி, தங்கள் தேவைகள் குறித்து மனு செய்கின்றனர். எனவே அரசு அலுவலர்கள் அந்த மனுக்களை மனுதாரர் நிலையிலிருந்து பரிசீலித்து உடன் நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே மனுக்கள் பெற வேணடும் என்றார் ஆட்சியர்.