திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக பெய்து வரும் மழையால் ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, அக்.28-ம் தேதி இரவு முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் புதன்கிழமை முழுவதும் பெய்த மழை காரணமாக வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை பகலில் விட்டு, விட்டு தூறல் விழுந்தவண்ணம் இருந்தது. வியாழக்கிழமை இரவு முழுவதும் மழை தொடர்ந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து மழைத் தூறல்கள் இருந்தது. பிற்பகலில் லேசான வெயில் அடித்தது. பெரும்பாலான நேரங்களில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.
திருவாரூர் மாவட்டத்தில் புதன்கிழமை முழுவதும் பெய்த மழை காரணமாக வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை பகலில் விட்டு, விட்டு தூறல் விழுந்தவண்ணம் இருந்தது. வியாழக்கிழமை இரவு முழுவதும் மழை தொடர்ந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து மழைத் தூறல்கள் இருந்தது. பிற்பகலில் லேசான வெயில் அடித்தது. பெரும்பாலான நேரங்களில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.