::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, November 23, 2009

அரசின் திட்டங்களை சிறுபான்மையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் தினம் கொண்டாடப்பட்டது.

விழாவுக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி, தேசிய ஒருமைப்பாடு வாரம் கொண்டாடப்படுகிறது. இதன்படி உறுதிமொழி ஏற்பு, சிறுபான்மையினர் தினம், மனித நேய வார விழா, கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழக அரசு குழந்தைகள், மாணவ, மாணவிகள், திருமண வயதுள்ள பெண்கள், முதியோர்கள் என அனைவருக்கும் தேவையான பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினருக்கு அவர்களது நலன் கருதி தொழில் செய்ய கடனுதவி, கல்வியில் இட ஒதுக்கீடு மற்றும் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத் திட்டங்களை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

Blog Archive