::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, October 12, 2009

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பயனுள்ள தகவல்களை பொதுமக்கள் பெற வேண்டும்

அரசிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பயனுள்ள தகவல்களை பொதுமக்கள் பெற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக். 6 முதல் அக்.12-ம் தேதி வரை தகவல் அறியும் உரிமை வார விழா கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பான கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், பொது அதிகார அமைப்புகளில் ஒளிவுமறைவற்ற நிர்வாகத்துக்கான தகவல்களை பொதுமக்கள் கேட்டு பெறலாம். இந்தச் சட்டத்தின் மூலம், முழுமையாக, முறையாக, பயனுள்ள தகவல்களை மக்கள் பெற வேண்டும். இந்தச் சட்டம் குறித்து அரசு அலுவலர்களும், தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர்.

- நன்றி/தினமணி.காம்

Blog Archive