தொடர் மழை, புயல் எச்சரிக்கை காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் புயல் உருவானதையடுத்து, சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. பிற்பகல் இந்த எச்சரிக்கைக் கூண்டு இறக்கப்பட்டது.
இருந்தபோதிலும், திருவாரூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. தொடர் மழை நீடிப்பதால் திருவாரூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்தில் பிரச்னை ஏற்பட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை: புயல் எச்சரிக்கை மற்றும் தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் செவ்வாய்க்கிழமை (டிச. 15) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் புயல் உருவானதையடுத்து, சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. பிற்பகல் இந்த எச்சரிக்கைக் கூண்டு இறக்கப்பட்டது.
இருந்தபோதிலும், திருவாரூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. தொடர் மழை நீடிப்பதால் திருவாரூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்தில் பிரச்னை ஏற்பட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை: புயல் எச்சரிக்கை மற்றும் தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் செவ்வாய்க்கிழமை (டிச. 15) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.