::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, December 5, 2009

ஏ.கே.எஸ். விஜ​யன் எம்.பி.க்கு புதிய பதவி

நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் தொகுதி மேம்​பாட்டு நிதி அம​லாக்க கமிட்​டி​யின் தலை​வ​ராக நாகை மக்​க​ள​வைத் தொகுதி உறுப்​பி​னர் ஏ.கே.எஸ். விஜ​யன் நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார். ​ ​

நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் 24 பேரை கொண்ட இந்த கமிட்டி,​ நாடு ​ முழு​வ​தும் ​ நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​க​ளின் மேம்​பாட்டு நிதி மூலம் செய்​யப்​ப​டும் பணி​க​ளைக் கண்​கா​ணித்​தல்,​ மற​றும் அந்த திட்​டத்​தின் பயன்​கள் மக்​களை முழு​மை​யா​கச் சென்​ற​டை​யும் வகை​யில் உரிய மாற்​றங்​க​ளைக் கொண்டு வரு​தல் உள்​ளிட்ட பணி​களை மேற்​கொள்​ளும். இந்த கமிட்​டி​யின் அலு​வ​ல​கம் நாடா​ளு​மன்ற வளா​கத்​தி​லேயே உள்​ளது.​ ​ ​

இந்த பத​வி​யின் மூல​மாக நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் தொகுதி மேம்​பாட்டு நிதி​யின் மூல​மாக செயல்​ப​டுத்​தப்​ப​டும் பணி​கள் அனைத்​தி​லும் கிரா​மப்​புற மேம்​பாடு மற்​றும் கல்வி மேம்​பாட்​டுக்கு உயர் முன்​னு​ரிமை அளிக்​கப்​ப​டும் என்​றார் விஜ​யன்.​ ​ ​

நாகை மக்​க​ளவை தொகு​தி​யில் மூன்​றா​வது முறை​யாக உறுப்​பி​ன​ராக தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​ட​வர் விஜ​யன்.

Blog Archive