::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Tuesday, December 15, 2009

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ​பள்​ளி​க​ளுக்கு இன்று விடு​முறை

புயல் எச்​ச​ரிக்கை கார​ண​மாக,​​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ​ பள்​ளி​க​ளுக்கு செவ்​வாய்க்​கி​ழமை விடு​முறை அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.​​ ​ ​

தென்​மேற்கு வங்​கக்​கட​லில் ஆழ்ந்த காற்​ற​ழுத்​தத் தாழ்வு நிலை கடந்த இரு தினங்​க​ளுக்கு மேலாக நிலை கொண்​டுள்​ளது.​ இத​னால் கடந்த இரு தினங்​க​ளாக திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் பர​வ​லாக மழை​பெய்து வரு​கி​றது.​ தொடர்ந்து திங்​கள்​கி​ழ​மை​யும் அதி​காலை தொடங்கி பகல் முழு​வ​தும் வானம் மேக​மூட்​டத்​து​டனே காணப்​பட்​டது.​ தொடர்ந்து மழை பெய்து கொண்​டே​யி​ருந்​தது.​ அவ்​வப்​போது லேசாக வெயில் அடித்​தது.​​ ​ ​ ​

விடு​முறை குறித்து மாவட்ட ஆட்​சி​யர் எம்.​ சந்​தி​ர​சே​க​ரன் வெளி​யிட்​டுள்ள செய்தி:​ ​​ ​ ​ புயல் செவ்​வாய்க்​கி​ழமை கரையை கடக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​ப​டு​வ​தால் செவ்​வாய்க்​கி​ழமை திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் மழை அதிக அள​வில் இருக்​கு​மெ​ன​வும்,​​ பலத்த காற்​றும் வீசக்​கூ​டும் என​வும் வானிலை ஆய்வு மையம் அறி​வித்​துள்​ளது.​ ​ ​ ​ மேலும் கடல் சீற்​றம் அதி​க​மாக இருக்​கும் என்​ப​தால்,​​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த மீன​வர்​கள் செவ்​வாய்க்​கி​ழமை கட​லுக்​குச் செல்ல வேண்​டா​மென அறி​வு​றுத்​தப்​பட்​டுள்​ள​னர்.​​ ​ ​

மழை,​​ காற்று அதி​க​மாக இருக்​கு​மென எதிர்​பார்க்​கப்​ப​டு​வ​தால் செவ்​வாய்க்​கி​ழமை ஒரு​நாள் மட்​டும் இம்​மா​வட்​டத்​தில் உள்ள பள்​ளி​க​ளுக்கு விடு​முறை அளிக்​கப்​ப​டு​கி​றது.​ பள்​ளி​க​ளில் பல்​வேறு வகுப்​பு​க​ளுக்கு நடை​பெ​றும் அரை​யாண்​டுத் தேர்​வு​கள் வேறொரு நாளில் நடத்​தப்​ப​டும் என ஆட்​சி​யர் தெரி​வித்​துள்​ளார்.

Blog Archive