திருவாரூர் மாவட்டத்தில் விடுபட்ட வாக்காளர் சேர்த்தல் மற்றும் நூறு சதவீத வாக்காளர் பட்டியல் கள ஆய்வுப் பணி ஆகியவற்றை விடியோ கான்பிரன்சிங் மூலம் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் நரேஷ் குப்தா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் ப்டடியல்களைத் திருத்தியமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதன் ஒரு கட்டமாக, இன்னும் ஒருவார காலத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் வாக்காளர் பட்டியலுடன் வீடுதோறும் சென்று, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். இதுதொடர்பான பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர் நரேஷ்குப்தா மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரனுடன் விடியோ கான்பிரன்சிங் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அ. ஜான்லூயிஸ், மன்னார்குடி மற்றும் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் வட்டாட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் ப்டடியல்களைத் திருத்தியமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதன் ஒரு கட்டமாக, இன்னும் ஒருவார காலத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் வாக்காளர் பட்டியலுடன் வீடுதோறும் சென்று, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். இதுதொடர்பான பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர் நரேஷ்குப்தா மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரனுடன் விடியோ கான்பிரன்சிங் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அ. ஜான்லூயிஸ், மன்னார்குடி மற்றும் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் வட்டாட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.