பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிச. 6-ம் தேதியையொட்டி, தமிழக முஸ்லிம் முன்னேற்றம் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கோரிக்கைகள்: பாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட அனுமதிக்க வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அப்போதைய காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை தற்போதைய காங்கிரஸ் அரசு நிறைவேற்ற வேண்டும். பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். பாபர் மசூதி இடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமுமுக சார்பில்... திருவாரூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலர் ஓய். சாதிக் பாட்ஷா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஹாஜா குத்புதீன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் குத்புதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தவ்ஹீத் ஜமாஅத்: திருவாரூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் எச். பீர்முகமது தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் கோவை அப்துல் ரகீம் சிறப்புரையாற்றினார். மாவட்டப் பொருளாலர் எஸ்.எம். ஹாஜா மைதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோரிக்கைகள்: பாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட அனுமதிக்க வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அப்போதைய காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை தற்போதைய காங்கிரஸ் அரசு நிறைவேற்ற வேண்டும். பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். பாபர் மசூதி இடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமுமுக சார்பில்... திருவாரூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலர் ஓய். சாதிக் பாட்ஷா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஹாஜா குத்புதீன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் குத்புதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தவ்ஹீத் ஜமாஅத்: திருவாரூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் எச். பீர்முகமது தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் கோவை அப்துல் ரகீம் சிறப்புரையாற்றினார். மாவட்டப் பொருளாலர் எஸ்.எம். ஹாஜா மைதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.