திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்ளாமல் விடுபட்டவர்களுக்கு மீண்டும் எடுத்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ.72,000-த்துக்கும் குறைவாக உள்ள ஏழை, எளிய மக்களுக்காகவும், 26 நலவாரியங்களில் உறுப்பினர்களாகவும் உள்ளவர்களுக்கு 51 வகையான நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் உயர் சிகிச்சைப் பெறுவதற்கு ஏதுவாக தமிழக அரசு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே அடையாள அட்டை வழங்குவதற்காக 2,52,570 குடும்பங்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு, இதுவரை 1,97,790 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் முதல் சுற்றில் விடுபட்டவர்களுக்காக மாவட்டம் முழுவதும் இரண்டாம் சுற்று புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கபட்டுள்ளது. இதன்படி, குடவாசல் வட்டத்தில் டிச.16-ம் தேதியும், நன்னிலம் வட்டத்தில் டிச.17 முதல் 19-ம் தேதி வரையிலும், வலங்கைமான் வட்டத்தில் டிச.20,21 தேதிகளிலும், நீடாமங்கலம் வட்டத்தில் டிச.22 முதல் 24-ம் தேதி வரையிலும், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் டிச.25 முதல் டிச. 27-ம் தேதி வரையிலும், திருவாரூர் வட்டத்தில் டிச. 28, 29 தேதிகளிலும் அந்தந்த கிராமம் அல்லது அருகிலுள்ள கிராம பள்ளிகளில் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும்.
முதல் சுற்றில் புகைப்படம் எடுக்காமல் விடுபட்ட நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குடும்பத்துடன் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-நன்றி/ தினமணி.காம்
இதுகுறித்து ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ.72,000-த்துக்கும் குறைவாக உள்ள ஏழை, எளிய மக்களுக்காகவும், 26 நலவாரியங்களில் உறுப்பினர்களாகவும் உள்ளவர்களுக்கு 51 வகையான நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் உயர் சிகிச்சைப் பெறுவதற்கு ஏதுவாக தமிழக அரசு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே அடையாள அட்டை வழங்குவதற்காக 2,52,570 குடும்பங்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு, இதுவரை 1,97,790 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் முதல் சுற்றில் விடுபட்டவர்களுக்காக மாவட்டம் முழுவதும் இரண்டாம் சுற்று புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கபட்டுள்ளது. இதன்படி, குடவாசல் வட்டத்தில் டிச.16-ம் தேதியும், நன்னிலம் வட்டத்தில் டிச.17 முதல் 19-ம் தேதி வரையிலும், வலங்கைமான் வட்டத்தில் டிச.20,21 தேதிகளிலும், நீடாமங்கலம் வட்டத்தில் டிச.22 முதல் 24-ம் தேதி வரையிலும், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் டிச.25 முதல் டிச. 27-ம் தேதி வரையிலும், திருவாரூர் வட்டத்தில் டிச. 28, 29 தேதிகளிலும் அந்தந்த கிராமம் அல்லது அருகிலுள்ள கிராம பள்ளிகளில் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும்.
முதல் சுற்றில் புகைப்படம் எடுக்காமல் விடுபட்ட நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குடும்பத்துடன் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-நன்றி/ தினமணி.காம்