செல்பேசியில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் எச்சரித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் சாலைகளில் இருசக்கர மற்றும் மூன்று, நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் வாகனங்களை ஒரு கையால் இயக்கிக் கொண்டே மற்றொரு கையில் செல்பேசியை வைத்துக் கொண்டு அதில் பேசிக் கொண்டு செல்வதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
ஒரு சிலரின் இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக சாலையில் கவனம் சிதறி விபத்துகளும், போக்குவரத்து நெரிசல் மற்றும் இதர வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறுகளும் ஏற்படுகின்றன.
எனவே, சாலைகளில் வாகனங்களை இயக்குபவர்கள் செல்பேசியில் பேசிக் கொண்டே வாகனங்களை இயக்கினால் அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் சாலைகளில் இருசக்கர மற்றும் மூன்று, நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் வாகனங்களை ஒரு கையால் இயக்கிக் கொண்டே மற்றொரு கையில் செல்பேசியை வைத்துக் கொண்டு அதில் பேசிக் கொண்டு செல்வதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
ஒரு சிலரின் இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக சாலையில் கவனம் சிதறி விபத்துகளும், போக்குவரத்து நெரிசல் மற்றும் இதர வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறுகளும் ஏற்படுகின்றன.
எனவே, சாலைகளில் வாகனங்களை இயக்குபவர்கள் செல்பேசியில் பேசிக் கொண்டே வாகனங்களை இயக்கினால் அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளார்.