திருவாரூர், மே 25:
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வ. செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதியை முன்னதாகவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பர். தற்போது கூடுதலாக பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற சான்றிதழைப் பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரும் போது ஏற்கெனவே பதிவு செய்துள்ள அடையாள அட்டையுடன் தற்போது தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 சான்றிதழையும் கொண்டு வர வேண்டும்.
ஏற்கெனவே பதிவு செய்யாதவர்கள் தற்போது பதிவு செய்ய விரும்பினால் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சான்றொப்பமிட்ட குடும்ப அட்டையின் நகலுடன் வர வேண்டும்.
சிறப்பு முகாம்... வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரே நேரத்தில் கூடும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் மே 27 முதல் 29-ம் தேதி வரை மூன்று தினங்களுக்கு பதிவு செய்யப்படவுள்ளது. இந்த முகாமில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி வட்டங்களில் உள்ள மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதர வட்டங்களில் உள்ளவர்கள் திருவாரூர், நேதாஜி சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
எஸ்எஸ்எல்சி பதிவு செய்வோர்... நிகழாண்டில் பள்ளி இறுதிவகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் போது கல்வித்துறையின் மூலம் அந்தந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் மூலமாகவே பதிவுப்படிவங்களைப் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கிய பின் வேலைவாய்ப்பு அலுவலர் ஒப்பமிடப்பட்ட அடையாள அட்டையை தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியருக்கு வழங்கப்பட்டு, பள்ளி வளாகத்திலேயே மனுதாரருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விடும் பதிவு செய்வதற்கு தேவையான படிவங்கள் முதன்மை கல்வி அலுவலர் மூலமாக பள்ளிகளுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கும் நாளில் தொடர்புடைய தலைமையாசிரியர்களிடம் வழங்கப்படும்.
பதிவு செய்ய விரும்புவோர் இந்த மாவட்டத்துக்குரிய குடும்ப அட்டையின் நகலில் சான்றொப்பம் பெற்று தலைமையாசிரியரிடம் அளித்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும். குடும்ப அட்டையில் பெயர் இல்லாதவர்களும் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இந்த மாவட்டத்தில் பதிவு செய்ய இயலாது. இந்த நடைமுறையின் மூலமாக எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வரத்தேவையில்லை என வ. செல்லத்துரை கேட்டுக் கொண்டுள்ளார்.
- நன்றி / தினமணி.காம்
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வ. செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதியை முன்னதாகவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பர். தற்போது கூடுதலாக பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற சான்றிதழைப் பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரும் போது ஏற்கெனவே பதிவு செய்துள்ள அடையாள அட்டையுடன் தற்போது தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 சான்றிதழையும் கொண்டு வர வேண்டும்.
ஏற்கெனவே பதிவு செய்யாதவர்கள் தற்போது பதிவு செய்ய விரும்பினால் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சான்றொப்பமிட்ட குடும்ப அட்டையின் நகலுடன் வர வேண்டும்.
சிறப்பு முகாம்... வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரே நேரத்தில் கூடும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் மே 27 முதல் 29-ம் தேதி வரை மூன்று தினங்களுக்கு பதிவு செய்யப்படவுள்ளது. இந்த முகாமில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி வட்டங்களில் உள்ள மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதர வட்டங்களில் உள்ளவர்கள் திருவாரூர், நேதாஜி சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
எஸ்எஸ்எல்சி பதிவு செய்வோர்... நிகழாண்டில் பள்ளி இறுதிவகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் போது கல்வித்துறையின் மூலம் அந்தந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் மூலமாகவே பதிவுப்படிவங்களைப் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கிய பின் வேலைவாய்ப்பு அலுவலர் ஒப்பமிடப்பட்ட அடையாள அட்டையை தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியருக்கு வழங்கப்பட்டு, பள்ளி வளாகத்திலேயே மனுதாரருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விடும் பதிவு செய்வதற்கு தேவையான படிவங்கள் முதன்மை கல்வி அலுவலர் மூலமாக பள்ளிகளுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கும் நாளில் தொடர்புடைய தலைமையாசிரியர்களிடம் வழங்கப்படும்.
பதிவு செய்ய விரும்புவோர் இந்த மாவட்டத்துக்குரிய குடும்ப அட்டையின் நகலில் சான்றொப்பம் பெற்று தலைமையாசிரியரிடம் அளித்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும். குடும்ப அட்டையில் பெயர் இல்லாதவர்களும் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இந்த மாவட்டத்தில் பதிவு செய்ய இயலாது. இந்த நடைமுறையின் மூலமாக எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வரத்தேவையில்லை என வ. செல்லத்துரை கேட்டுக் கொண்டுள்ளார்.
- நன்றி / தினமணி.காம்
No comments:
Post a Comment