::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, May 6, 2009

பிளஸ் 1: சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

திருவாரூர், மே 6: திருவாரூர் மாவட்ட அளவில் பிளஸ் 1 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

திருவாரூர் மாவட்ட அளவில் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார்.

பிளஸ் 1 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் விவரம் (அடைப்புக்குள் பெற்ற மதிப்பெண்கள்) :
அரசுப் பள்ளி அளவில் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். செல்வபாரதி (1,069), நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ. ஆயிஷா ஷப்ரீன் (1,067), கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி. திவ்யா (1,032) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.

அரசு உதவிபெறும் பள்ளி அளவில் மன்னார்குடி தூயவளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தி. தாபியா (1,107), திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எஸ். சொப்னா (1,100), ஆர். லெட்சுமி பிரியா (1,090) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.

மெட்ரிக் பள்ளி அளவில் புனித ஜூட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி டி. பாரதி (1,116), நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ. கோகிலா (1,086), நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.எச். முகமது உசைன் (1,081) ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

9-ம் வகுப்பு: அரசு பள்ளி அளவில் செருவாமணி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் வே. ஆதிகேசவன் (566), அத்திக்கடை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் கே. குமரேசன் (564), விளமல் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் ம. சுப்பையன் (560), கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.ஏ. முர்ஷிதா சுமின் (560) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர் ஸ்ரீசக்தி (542), மஞ்சக்குடி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சி. சில்வியா (539), ஆர்.எம். புவனேஸ்வரி (536) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.

இவ்விழாவில் முனைவர் செல்வசேகரன், ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஆர். ரத்தினகுமாரி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம். ராஜமாணிக்கம் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

- நன்றி / தினமணி.காம்

No comments:

Blog Archive