::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Tuesday, May 5, 2009

நாகை மக்களவை தொகுதி / வேட்பாளர்கள் பயோடேட்டா



நாகை மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர்- ஏ.கே.எஸ்.விஜயன்

நாகப்பட்டினம்: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், 3வது முறையாக நாகப்பட்டினம் தனி தொகுதியில் போட்டியிடுகிறார்.

48 வயதாகும் விஜயனின் தொழில் விவசாயம். இவரது தந்தை சுப்பையா முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஆவார்.

1991ம் ஆண்டு ஒன்றியத் துணைச் செயலாளராக, ஒன்றியச் செயலாளராக இருந்தார். 2004ம் ஆண்டு நாகப்பட்டனம் மாவட்ட திமுக செயலாளராக நிறுத்தப்பட்டார். 1999ம் ஆண்டு முதல் நாகை தொகுதியின் எம்.பியாக உள்ளார்.

3வது முறையாக எம்.பியாக காத்திருக்கும் விஜயன், மக்களிடையே நல்ல பெயர் பெற்றவர். இடதுசாரிகள் ஆதிக்கம் உள்ள இந்தத் தொகுதியில் அவர்களை சமாளிக்கும் திறனும் மக்கள் செல்வாக்கும் கொண்ட வேட்பாளர் என்பதால் இவர் இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது கிட்டத்தட்ட 2 மாதத்துக்கு முன்பே முடிவாகிவிட்டது.

மக்களவையிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் வாங்கியவர்.


நாகை மக்களவை தொகுதி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் -எம். செல்வராசு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் தனி தொகுதியில் 3 முறை எம்.பியாக இருந்த எம்.செல்வராஜ் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார்.

நாகை மாவட்டம் நீடாமங்கலம், கப்பலுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு கமலவதனம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

மாநில நிர்வாகக் குழு உறுப்பினராகவும், நாகை மாவட்ட
சிபிஐ செயலாளராகவும் இருக்கிறார்.

நாகை தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டுள்ளார் செல்வராஜ். இதில் 1989, 1996, 1998 ஆகிய தேர்தல்களில்
வெற்றி பெற்று எம்.பியானார்.

தற்போது 6வது முறையாக போட்டியிடுகிறார். 4வது முறையாக எம்.பி ஆவேன் என்ற நம்பிக்கையி்ல் பணிகளைத் தொடங்கியுள்ளார்.


நாகை மக்களவை தொகுதி: தேமுதிக வேட்பாளர்- மகா. முத்துக்குமார்

நாகை: ரியல் எஸ்டேட் தொழிலை முதன்மையாக பார்த்து வரும் திருத்துறைப் பூண்டியைச் சேர்ந்த மகா. முத்துக்குமார், நாகை தொகுதி தேமுதிக வேட்பாளராக களம் புகுந்துள்ளார்.

36 வயதே ஆகும் முத்துக்குமார் பி.ஏ. படித்த பட்டதாரி. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவரது முதன்மைத் தொழில் ரியல் எஸ்டேட். அதில் கிடைத்த பெயருடன் விஜயகாந்த்தின் தேமுதிக வில் இணைந்தார். தற்போது திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளராக இருக்கிறார்.

ரியல் எஸ்டேட்டில் இருப்பதால் நாகை தொகுதி முழுக்க இவருக்கு அத்துப்படியாம்.

தனக்காக நிறையப் பேர் வாக்கு சேகரித்து வருவதாக கூறும் முத்துக்குமார், விஜயகாந்த்தின் பிரசாரம் தனக்கு கூடுதல் பலத்தைத் தரும், நிறைய வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

- நன்றி / தட்ஸ்தமிழ்.காம்

No comments:

Blog Archive