::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, May 4, 2009

திருவாரூர் மாவட்டத்தில் மே 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவாரூர், மே 4:
முத்துப்பேட்டை தர்ஹா கந்தூரி விழாவையொட்டி, வருகின்ற மே 6-ம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் தர்ஹாவில் சிறப்பு வாய்ந்த கந்தூரி விழா மே 5-ம் தேதி இரவு நடைபெறுகிறது.

இதையொட்டி மே 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூன் 6-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 6-ம் தேதி அரசு கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு செயல்படும்.

இந்த விடுமுறை அரசுத் தேர்வுகள், நேர்காணல்கள் மற்றும் வங்கிகளுக்குப் பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

-நன்றி/தினமணி.காம்

No comments:

Blog Archive