::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Friday, May 8, 2009

போடுங்கம்மா ஓட்டு... ஊரு நலனை பார்த்து...

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 13 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற இருக்கின்றது.

5 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் இறுதி கட்டமாக மே மாதம் 13 ஆம் தேதி (புதன் கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியிலும் அதே தினத்தில் வாக்குப் பதிவு நடக்கிறது.

நமதூரின் இஸ்லாமிய பாரம்பரியத்தையும், சமூக ந‌லனையும் காக்கும் மற்றும் அனைத்து துறைகளிலும் நமதூர் சமுதாய மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள சரியான கட்சிக்கு... சொந்த கொள்கை, அணி, கட்சி மற்றும் அமைப்பு வேற்றுமைகளை மறந்து, ஊரின் நலன் க‌ாக்கும் நியாயமான திறமையான வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராகும் படி கேட்டுக் கொள்கிறோம்.

என்ன மே 13 ஆம் தேதி வாக்களிக்க தயாராகி விட்டீர்களா?

No comments:

Blog Archive