::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, May 6, 2009

அரசு பேருந்து மோதி ஒருவர் மரணம்

திருவாரூர், மே 5: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே அரசுப் பேருந்து மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திங்கள்கிழமை இரவு இறந்தார்.

நாகை மாவட்டம், வடகரை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் குருமூர்த்தி (32). இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் கூத்தாநல்லூர் அருகிலுள்ள குடிதாங்கிச்சேரி அருகே சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் உடல் நசுங்கி அதே இடத்தில் குருமூர்த்தி இறந்தார்.

இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

- நன்றி/தினமணி.காம்

No comments:

Blog Archive