திருவாரூர், ஆக. 6:
திருவாரூர் மாவட்டத்தில் விடுதலின்றி முதியோர் ஓய்வூதிய உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் 32,555 பேருக்கு முதியோர் உதவித் தொகைகள் அந்தந்த வட்டத்தில் உள்ள சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர்களால் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இதில் தற்போது கணினி மூலம் பணவிடைகள் அச்சடித்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் சில பயனாளிகளுக்கு சரியான முகவரியில்லாமல் பணவிடைகள் சென்றடையாமல் உள்ளதாகத் தெரிகிறது.
இதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முகவரிகள் சரிசெய்யப்பட்டு ஜூன் மாதத்துக்கு விடுதலின்றி பயனாளிகள் அனைவருக்கும் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு ஏதேனும் தகவல்கள், குறைகள் இருப்பின் 94888 92608 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- நன்றி/ தினமணி.காம்
திருவாரூர் மாவட்டத்தில் விடுதலின்றி முதியோர் ஓய்வூதிய உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் 32,555 பேருக்கு முதியோர் உதவித் தொகைகள் அந்தந்த வட்டத்தில் உள்ள சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர்களால் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இதில் தற்போது கணினி மூலம் பணவிடைகள் அச்சடித்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் சில பயனாளிகளுக்கு சரியான முகவரியில்லாமல் பணவிடைகள் சென்றடையாமல் உள்ளதாகத் தெரிகிறது.
இதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முகவரிகள் சரிசெய்யப்பட்டு ஜூன் மாதத்துக்கு விடுதலின்றி பயனாளிகள் அனைவருக்கும் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு ஏதேனும் தகவல்கள், குறைகள் இருப்பின் 94888 92608 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- நன்றி/ தினமணி.காம்
No comments:
Post a Comment