ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் திருவாரூர் மாவட்டத்தில் மின் கட்டண கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மின் வாரிய செயற்பொறியாளர் எஸ். சத்தியநாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின் கட்டணக் கணக்கீடு மற்றும் வசூல் செய்வதில் தற்போதுள்ள முறையில் மாற்றம் செய்யப்பட்டு மாதம் முழுவதும் வேலை நாள்களில் பணம் செலுத்தும் புதிய திட்டத்தை ஏப். 1-ம் தேதி முதல் திருவாரூர் மின் பகிர்மான வட்டத்தில் அமல்படுத்த மின் வாரியம் உத்தேசித்துள்ளது.
தற்போது உள்ள பிரதி மாதம் 16-ம் தேதி முதல் மின் கணக்கீடு செய்தல், பிரதி மாதம் 1-ம் தேதி முதல் வசூல் செய்யும் முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் 1-ம் தேதி முதல் மாத கடைசி வரை மின் கணக்கீடும், மின் கணக்கீடு முடிந்த 2-ம் நாளிலிருந்து மாதம் முழுவதும் வேலை நாள்களில் பணம் செலுத்தும் முறையும் அமல்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் கட்டணம் செலுத்துவதில் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்.
இந்த புதிய திட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை கணக்கீடு செய்த 20 நாள்களுக்குள் செலுத்த வேண்டும். உதாரணமாக ஒரு நுகர்வோரின் மீட்டரில் கணக்கெடுப்பு செய்து வெள்ளை அட்டையில் பதிவு செய்த நாள் ஏப்ரல் 1-ம் தேதி எனில், அவர் தமது மின் கட்டணத்தை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு கட்டத் தவறினால் ஏப்ரல் 21-ம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
மின் கணக்கீட்டில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், கணக்கீடு முடிந்த 5 தினங்களுக்குள் பிரிவு அலுவலரை சந்தித்து குறையை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
அதேபோல, ஏப்ரல் 30-ம் தேதி கணக்கெடுப்பு செய்யப்பட்ட மின் நுகர்வோர் தனது கட்டணத்தை மே 18-ம் தேதிக்குள் கட்ட வேண்டும்.
முன்பிருந்தது போலவே இரு மாதத்துக்கு ஒரு முறை கணக்கீடு செய்யும் முறைதான் இந்த புதிய முறையிலும் பின்பற்றப்படும். ஆனால், கணக்கெடுப்பு 16-ம் தேதிக்கு பதிலாக 1-ம் தேதி தொடங்கும். எனவே, மாதம் முழுவதும் வேலை நாள்களில் பணம் செலுத்தும் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மின் நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தை திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் செலுத்தலாம்.
நன்றி - தினமணி.காம்
இதுகுறித்து திருவாரூர் மின் வாரிய செயற்பொறியாளர் எஸ். சத்தியநாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின் கட்டணக் கணக்கீடு மற்றும் வசூல் செய்வதில் தற்போதுள்ள முறையில் மாற்றம் செய்யப்பட்டு மாதம் முழுவதும் வேலை நாள்களில் பணம் செலுத்தும் புதிய திட்டத்தை ஏப். 1-ம் தேதி முதல் திருவாரூர் மின் பகிர்மான வட்டத்தில் அமல்படுத்த மின் வாரியம் உத்தேசித்துள்ளது.
தற்போது உள்ள பிரதி மாதம் 16-ம் தேதி முதல் மின் கணக்கீடு செய்தல், பிரதி மாதம் 1-ம் தேதி முதல் வசூல் செய்யும் முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் 1-ம் தேதி முதல் மாத கடைசி வரை மின் கணக்கீடும், மின் கணக்கீடு முடிந்த 2-ம் நாளிலிருந்து மாதம் முழுவதும் வேலை நாள்களில் பணம் செலுத்தும் முறையும் அமல்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் கட்டணம் செலுத்துவதில் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்.
இந்த புதிய திட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை கணக்கீடு செய்த 20 நாள்களுக்குள் செலுத்த வேண்டும். உதாரணமாக ஒரு நுகர்வோரின் மீட்டரில் கணக்கெடுப்பு செய்து வெள்ளை அட்டையில் பதிவு செய்த நாள் ஏப்ரல் 1-ம் தேதி எனில், அவர் தமது மின் கட்டணத்தை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு கட்டத் தவறினால் ஏப்ரல் 21-ம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
மின் கணக்கீட்டில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், கணக்கீடு முடிந்த 5 தினங்களுக்குள் பிரிவு அலுவலரை சந்தித்து குறையை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
அதேபோல, ஏப்ரல் 30-ம் தேதி கணக்கெடுப்பு செய்யப்பட்ட மின் நுகர்வோர் தனது கட்டணத்தை மே 18-ம் தேதிக்குள் கட்ட வேண்டும்.
முன்பிருந்தது போலவே இரு மாதத்துக்கு ஒரு முறை கணக்கீடு செய்யும் முறைதான் இந்த புதிய முறையிலும் பின்பற்றப்படும். ஆனால், கணக்கெடுப்பு 16-ம் தேதிக்கு பதிலாக 1-ம் தேதி தொடங்கும். எனவே, மாதம் முழுவதும் வேலை நாள்களில் பணம் செலுத்தும் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மின் நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தை திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் செலுத்தலாம்.
நன்றி - தினமணி.காம்