::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, March 30, 2011

அன்னை கஸ்தூரிபா காந்தி பள்ளி ஆண்டு சந்திப்பு 2011

லெட்சுமாங்கு‌டி - கம்பர் தெரு அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளியின் 28-ம் ஆண்டு சந்திப்பு 2011 கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

ஆண்டு சந்திப்பு 2011 வழக்கமான ஆண்டு விழாவினை போல் அல்லாமல் (பெற்றோர் ஆசிரியர் கூட்டம் - பரிசளிப்பு விழா - மாயாஜால தந்திர காட்சி) ஆகிய நிகழ்வுகளுடன் அனைத்து தரப்பு பெற்றோர்களின் அதிகமான வருகையுடனும், ஒத்துழைப்புடனும் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கூத்தாநல்லூர் பெரியப்பள்ளி ஜமாஅத் செயலாளர் ஜனாப். J.M.A. ஷேக் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். அன்னை கஸ்தூரிபா காந்தி கல்வி அறக்கட்டளையின் Board of Trustee K.A.செய்யது முபாரக் அவர்கள், ராயல் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் P.M.A.முஹம்மது ரபீயுதீன் அவர்கள், நமது www.koothanallur.co.in - Admin M.A.முஹம்மது ரியாசுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அன்னை கஸ்தூரிபா காந்தி பள்ளியின் முன்னாள் தாளாளர் திருமதி. R.சரஸ்வதி அவர்கள் வாழ்த்துரை வழங்கி, விளையாட்டுப் போட்‌டிகளின் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருள்களை வழங்கினார்.

முன்னதாக, பள்ளி தாளாளர் / முதல்வர் N.A.செய்யது நாசர் அவர்கள் அனைவரையும் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். முடிவில் பள்ளி ஆசிரியை D.ரேகா நன்றி கூறினார்.

No comments:

Blog Archive