திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்.
தஞ்சாவூரிலிருந்து செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டர் மூலம் நாகை மாவட்டம், செம்பனார்கோவில் செல்லும் ஜெயலலிதா, அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு வந்தார்.
அங்கிருந்து, பிரசார வேன் மூலம் திருவாரூர் தெற்கு வீதியில் பிற்பகல் ஒரு மணியளவில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் ஆர். காம்ராஜ் (நன்னிலம்), குடவாசல் எம். ராஜேந்திரன் (திருவாரூர்), சிவா. ராஜமாணிக்கம் (மன்னார்குடி) மற்றும் கே. உலகநாதன் (திருத்துறைப்பூண்டி - இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். திருவாரூரிலிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, கடலூர் மாவட்டம், புவனகிரிக்குச் சென்றார் ஜெயலலிதா.
நன்றி - தினமணி.காம்
தஞ்சாவூரிலிருந்து செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டர் மூலம் நாகை மாவட்டம், செம்பனார்கோவில் செல்லும் ஜெயலலிதா, அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு வந்தார்.
அங்கிருந்து, பிரசார வேன் மூலம் திருவாரூர் தெற்கு வீதியில் பிற்பகல் ஒரு மணியளவில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் ஆர். காம்ராஜ் (நன்னிலம்), குடவாசல் எம். ராஜேந்திரன் (திருவாரூர்), சிவா. ராஜமாணிக்கம் (மன்னார்குடி) மற்றும் கே. உலகநாதன் (திருத்துறைப்பூண்டி - இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். திருவாரூரிலிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, கடலூர் மாவட்டம், புவனகிரிக்குச் சென்றார் ஜெயலலிதா.
நன்றி - தினமணி.காம்