::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Thursday, February 24, 2011

குளத்தின் சுற்றுச்சுவர் மறுசீரமைப்பு பணிகள் துவக்கம்



நமது கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில் குளத்தின் 104 ஆண்டுகள் பழமையான சுற்றுச்சுவர் தொடந்து பெய்த கனமழையின் காரணமாக கடந்த 2010 - நவம்பர் மாதம் - 27ம் தேதி குளத்திற்குள் விழுந்துவிட்டது.

குளத்தின் சுற்றுச்சுவரினை மீண்டும் கட்ட ஊகிக்கப்பட்ட செலவுகள் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் என கணக்கிடப்பட்டு தமி‌ழக அரசின் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் பகிர்ந்து கொண்டு கட்டி முடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு அதற்கான சரிபாதி பங்குத்தொகை ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் நமது பெரியப்பள்ளிவாயில் நிர்வாகத்தின் சார்பாக திருவாரூா் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக குளத்தின் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, கடந்த 3 நாட்களாக “பொக்லின்” எனப்படும் கனரக இயந்திரத்தின் துணையுடன், கான்கிரீட் சுவர் அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெறுவதாக பெரியப்பள்ளிவாயில் நிர்வாகத்தினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.

தகவல் - ஜமால். ஷேக் அப்துல் காதர்
செயலாளர், கூத்தாநல்லூர் பெரியப்பள்ளிவாயில்

Blog Archive