::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Tuesday, March 16, 2010

தக்பீர் ஹஜ் சர்வீஸின் உம்ரா பயிற்சி முகாம்

தக்பீர் ஹஜ் சர்வீஸின் உம்ரா பயிற்சி முகாம் கடந்த 13-03-2010 சனிக்கிழமை அன்று நமதூர் செல்வி மஹாலில் காலை 9.30 மணி முதல் 1.30 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு அல்ஹாஜ் கே.எம்.ஏ.முஹம்மது மைதீன் காதிரி அவர்கள் தலைமை ஏற்க, நமதூரைச் சார்ந்த அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், தக்பீர் ஹஜ் சா்வீஸில் உம்ரா சென்றவர்கள், செல்ல இருப்பவர்கள் மற்றும்
ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

நமதூர் ஜமாஅத் தலைவர் ஹாஜி என்.ஏ. சகாபுதீன் அவர்கள் வரவேற்புரையாற்ற, நமதூர் பள்ளிவாயில்களின் இமாம்கள் வாழ்த்துரை வழங்கினர். உம்ரா பிரயாண விளக்கவுரையை தக்பீர் ஹஜ் சர்வீஸின் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ். என்.எஸ். சிராஜூதீன் அவர்கள் விவரித்தார்.

உம்ராவிற்கான பயிற்சி வகுப்பில் சென்னை அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா அல்ஹாஜ். எம். அபூபக்கர் சித்திக் யூசுபி ரஷாதி அவர்கள் ‌நேரடி விளக்கமளித்தார்.

இறுதியாக அல்ஹாஜ். கே.ஏ.பரக்கத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை கூற நீண்ட துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.













Blog Archive