::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, January 11, 2010

புதிய குடும்ப அட்டைகளுக்கும் 3 லிட்டர் மண்ணெண்ணெய்

திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஜனவரி மாதமும் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என ஆட்சியர் எம்.​ சந்திரசேகரன் தெரிவித்தார்.​ ​ ​

திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புதிதாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளில் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத மற்றும் ஒரு இணைப்பு உள்ளவர்களுக்கு ஆக.​ 2008 முதல் மாதந்தோறும் தொடர்ந்து 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.​ தொடர்ந்து ஜனவரி மாதத்துக்கும் தலா மூன்று லிட்டர் வீதம் மண்ணெண்ணெய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.​​ ​ ​

எனவே,​​ மண்ணெண்ணெய் பெற தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் 3 லிட்டர் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Blog Archive