::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Sunday, May 8, 2011

பிளஸ் டூ தேர்வு முடிவுகள்...நமது இணையதளத்தில்

தமிழகத்தில் கடந்த மார்ச் 2011-ல் நடந்து முடிந்த ப்ளஸ்டூ தேர்வு முடிவுகளை நாளை (09-05-2011) காலை உங்கள் www.koothanallur.co.in இணைய தளத்தில் பார்க்கலாம்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50,000க்கும் அதிகமானோர் தனித் தேர்வர்களாகவும் எழுதியுள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். (SMS) மூலம் உங்கள் Mobile Phone-ல் பெற www.tnpubliclibraries.gov.in/+2-results.html என்ற முகவரிக்கு சென்று மாணவன்/மாணவி பெயர் ,பதிவு எண் (Reg No),அலைப்பேசி எண் (Mobile No.), மற்றும் முகவரி கொடுத்து Register செய்ய வேண்டும். பிறகு 9ம் தேதி காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் உங்கள் அலைப்பேசியில் (Mobile) எஸ்.எம்.எஸ். (SMS) மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


மே 9-ம் தேதி காலை 8.45 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. அடுத்த சில நிமிடங்களில் நமது இணையதளத்தில் முடிவுகளைக் காணலாம்.

Blog Archive