திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு. கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தொகுதி மறுசீரமைப்பில் தனித் தொகுதியாக இருந்த திருவாரூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இதையடுத்து, முதல் முறையாக தான் இளவயதில் படித்து, வளர்ந்த திருவாரூரில் போட்டியிட்டார் கருணாநிதி.
அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அக் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் குடவாசல் எம். ராஜேந்திரன், பாஜக சார்பில் ஆர். பிங்களன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டி. ஜயராமன், சுயேச்சையாக டிராபிக் ராமசாமி உள்ளிட்ட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் - 1,04,822, பெண்கள் - 1,04,511, இதரர் 4 என மொத்தம் 2,09,337 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஏப். 13-ல் நடைபெற்ற வாக்குப்பதிவில் அஞ்சல் வாக்குகளையும் சேர்த்து மொத்தம் 1,73,159 வாக்குகள் பதிவாயின.
இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் திருவாரூர் கிடாரங்கொண்டான் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன.
திமுக சார்பில் போட்டியிட்ட மு. கருணாநிதி 1,09,014 வாக்குகள் பெற்று வென்றார். அதிமுக வேட்பாளர் குடவாசல் எம். ராஜேந்திரன் - 58,765 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போது நடைபெற்ற தேர்தல் வெற்றியின் மூலம், தொடர்ந்து 4-வது முறையாக திமுக தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டதால், இத் தொகுதி வி.வி.ஐ.பி. தொகுதியாகவும், அனைவரின் கவனத்தை ஈர்த்த தொகுதியாகவும் நிகழ்ந்தது.
திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்ற மு. கருணாநிதிக்குப் பதிலாக அவரது முதன்மை முகவரும், தொ.மு.ச. மாநிலச் செயலருமான சண்முகம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தொகுதி தேர்தல் அலுவலரும், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியருமான ராமனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
தொகுதி மறுசீரமைப்பில் தனித் தொகுதியாக இருந்த திருவாரூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இதையடுத்து, முதல் முறையாக தான் இளவயதில் படித்து, வளர்ந்த திருவாரூரில் போட்டியிட்டார் கருணாநிதி.
அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அக் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் குடவாசல் எம். ராஜேந்திரன், பாஜக சார்பில் ஆர். பிங்களன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டி. ஜயராமன், சுயேச்சையாக டிராபிக் ராமசாமி உள்ளிட்ட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் - 1,04,822, பெண்கள் - 1,04,511, இதரர் 4 என மொத்தம் 2,09,337 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஏப். 13-ல் நடைபெற்ற வாக்குப்பதிவில் அஞ்சல் வாக்குகளையும் சேர்த்து மொத்தம் 1,73,159 வாக்குகள் பதிவாயின.
இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் திருவாரூர் கிடாரங்கொண்டான் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன.
திமுக சார்பில் போட்டியிட்ட மு. கருணாநிதி 1,09,014 வாக்குகள் பெற்று வென்றார். அதிமுக வேட்பாளர் குடவாசல் எம். ராஜேந்திரன் - 58,765 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போது நடைபெற்ற தேர்தல் வெற்றியின் மூலம், தொடர்ந்து 4-வது முறையாக திமுக தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டதால், இத் தொகுதி வி.வி.ஐ.பி. தொகுதியாகவும், அனைவரின் கவனத்தை ஈர்த்த தொகுதியாகவும் நிகழ்ந்தது.
திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்ற மு. கருணாநிதிக்குப் பதிலாக அவரது முதன்மை முகவரும், தொ.மு.ச. மாநிலச் செயலருமான சண்முகம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தொகுதி தேர்தல் அலுவலரும், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியருமான ராமனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.