திருவாரூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்கள் எப்போது வேண்டுமானாலும் அத்தியாவசியப் பொருள்களை நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எம். தங்கவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குடும்ப அட்டையில் தொடர்ந்து மூன்று மாதங்களாகப் பொருள்கள் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால், அந்த குடும்ப அட்டை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என புகார்கள் வந்துள்ளன.
இதனடிப்படையில் ஏற்கெனவே இதுகுறித்து அறிவுரைகள் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்குவதோ, வாங்காமல் இருப்பதோ குடும்ப அட்டைதாரர்களின் முழு உரிமை. எனவே, தொடர்ந்து பொருள்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை பொருள்கள் வாங்குவதற்காக நிறுத்தி வைக்கக் கூடாது என மீண்டும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதோடு, பல மாதங்களாக பொருள்கள் வாங்காமல் தேவைப்படும் போது பொருள்கள் வாங்கச் செல்லும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்க மறுக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு தொடர்ந்து பொருள்கள் வழங்கப்பட வேண்டுமென நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையைப் பயன்படுத்தி தொடர்ந்து எல்லா மாதங்களிலும் பொருள்கள் வாங்க வேண்டுமென்ற நிர்பந்தம் கிடையாது.
குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குத் தேவைப்படும் போது குடும்ப அட்டையைப் பயன்படுத்தி தேவையான பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பான குறைகள் ஏதேனும் இருப்பின் திருவாரூர் மாவட்ட வழங்கல் அலுவலர் செல்பேசி எண் 94450 00295 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என எம். தங்கவேல் தெரிவித்துள்ளார்.
குடும்ப அட்டையில் தொடர்ந்து மூன்று மாதங்களாகப் பொருள்கள் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால், அந்த குடும்ப அட்டை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என புகார்கள் வந்துள்ளன.
இதனடிப்படையில் ஏற்கெனவே இதுகுறித்து அறிவுரைகள் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்குவதோ, வாங்காமல் இருப்பதோ குடும்ப அட்டைதாரர்களின் முழு உரிமை. எனவே, தொடர்ந்து பொருள்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை பொருள்கள் வாங்குவதற்காக நிறுத்தி வைக்கக் கூடாது என மீண்டும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதோடு, பல மாதங்களாக பொருள்கள் வாங்காமல் தேவைப்படும் போது பொருள்கள் வாங்கச் செல்லும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்க மறுக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு தொடர்ந்து பொருள்கள் வழங்கப்பட வேண்டுமென நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையைப் பயன்படுத்தி தொடர்ந்து எல்லா மாதங்களிலும் பொருள்கள் வாங்க வேண்டுமென்ற நிர்பந்தம் கிடையாது.
குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குத் தேவைப்படும் போது குடும்ப அட்டையைப் பயன்படுத்தி தேவையான பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பான குறைகள் ஏதேனும் இருப்பின் திருவாரூர் மாவட்ட வழங்கல் அலுவலர் செல்பேசி எண் 94450 00295 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என எம். தங்கவேல் தெரிவித்துள்ளார்.