கூத்தாநல்லூர், ஏப் 2-
கூத்தாநல்லூர் பெரியகடைத்தெருவில் நாச்சிமுத்து என்பவர் என்.எம் டெக்ஸ்டைல்ஸ் ரெடிமெட்ஸ் எனும் ஜவுளிக் கடையை நடத்திவருகிறார். சம்பவத்தன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.ஆயிரம் மதிப்புள்ள டிஜிட்டல் கேமரா திருடப்பட்டு உள்ளது. இதே போல அதே தெருவிலுள்ள மணி ஜூவல்லரி நகை கடையின் வெளிக்கதவை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்து உள்கதவை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.நடராஜன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
No comments:
Post a Comment