::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, April 5, 2010

திருவாரூர் மாவட்டத்தில் ஏப்.26ல் உள்ளூர் விடுமுறை

முத்துப்பேட்டை கந்தூரி விழாவை ஒட்டி வரும் 26ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக கலெக்டர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முத்துப்பேட்டை மகான் ஹக்கீம் செய்குதாவூது வலியுல்லா தர்காவில் பெரிய கந்தூரி சந்தனக்கூடு திருவிழா வரும் 25ம் தேதி நடக்கிறது. இதை ஒட்டி 26ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இதை ஈடு செய்யும் வகையில் மே 15ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளான 26ம் தேதி அரசு கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும்.

இந்த விடுமுறை அரசு தேர்வுகள், நேர்காணல்கள், வங்கிகளுக்கு பொருந்தாது.

நன்றி - தினமலர்.காம்

Blog Archive