கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் தேர்தலின் சுழற்சி முறையில் மாற்றம் வேண்டி கூத்தாநல்லூர் ஜமாஅத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு (ரிட் மனு) இன்று (14-10-2011) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணையின் முடிவில்- எதிர்மனுதாரருக்கு (தேர்தல் ஆணையத்திற்கு) 3 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும், இதனிடையே எதிர்வரும் 17ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், அது நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெற்றிபெற்ற வேட்பாளர் பதவியேற்க நீதிமன்ற தீர்ப்பு வரும் நாள் வரை காத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் பிரச்சாரம் நாளை (15-10-2011) சனிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடையும் இவ்வேளையில், கூத்தாநல்லூர் மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இவ்வழக்கின் தீர்ப்பு விரைவில் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்ற இறைவனிடம் துஆச் செய்ய வேண்டுமாய் கூத்தாநல்லூர் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விசாரணையின் முடிவில்- எதிர்மனுதாரருக்கு (தேர்தல் ஆணையத்திற்கு) 3 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும், இதனிடையே எதிர்வரும் 17ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், அது நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெற்றிபெற்ற வேட்பாளர் பதவியேற்க நீதிமன்ற தீர்ப்பு வரும் நாள் வரை காத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் பிரச்சாரம் நாளை (15-10-2011) சனிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடையும் இவ்வேளையில், கூத்தாநல்லூர் மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இவ்வழக்கின் தீர்ப்பு விரைவில் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்ற இறைவனிடம் துஆச் செய்ய வேண்டுமாய் கூத்தாநல்லூர் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment