::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, February 1, 2010

கூத்தாநல்லூர் அருகே ஒருவர் வெட்டிக் கொலை

திருவாரூரை அடுத்துள்ள பொதக்குடியைச் சேர்ந்த கமாலுதீன் மகன் ஹாஜா பகுருதீன் ​(42).​ இவரும்,​​ கூத்தாநல்லூா் ஏ.ஆா் ரோட்டைச் சேர்ந்த குல்முகமது மகன் ஜகபர்தீன் ​(36) என்பவரும் நண்பர்கள்.​ ​

இந்நிலையில்,​​ கடந்த 2001-ம் ஆண்டு,​​ பகுருதீனுக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையை ஜகபர்தீன் தாக்கி சேதப்படுத்தினாராம்.​ இந்த வழக்கில் ஜகபர்தீன் எதிரியாகச் சேர்க்கப்பட்டு,​​ வழக்கு நடைபெற்று வருகிறது.​ ​ இதற்கிடையே,​​ கடந்த 2007-ம் ஆண்டு வழக்குச் செலவுக்காக ரூ.​ 50,000 ​ வேண்டும் என ஜகபர்தீன் கேட்டாராம்.​ பணம் தர பகுருதீன் மறுத்ததால்,​​ அப்போதிலிருந்து இருவருக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.​​

இந்நிலையில்,​​ ஞாயிற்றுக்கிழமை பொதக்குடிக்கு வந்த ஜகபர்தீனை,​​ பகுருதீன் உள்ளிட்ட 5 பேர் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.​ ​ இதில் பலத்த காயமடைந்த ஜகபர்தீன் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.​ ​ ​

கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து,​​ ஹாஜா பகுருதீன்​​ உள்ளிட்ட 5 பேரைத் தேடி வருகின்றனர்.
- தகவல் / தினமணி.காம்

Blog Archive