::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, September 28, 2009

பிள்ளைகளை அடித்தால் அறிவுக்கூர்மை குறையும்!

பிள்ளைகளை அதிகளவில் அடித்தால் அவர்களின் அறிவுக்கூர்மை மழுங்கி விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கலை. பெரும்பாலான பெற்றோர்களுக்கு அது தெரிவதில்லை. எதற்கெடுத்தாலும் அடி, உதை... குத்துதான். படிக்கவில்லையா? சொன்ன பேச்சு கேட்கவில்லையா? தலையில் நாலு குட்டு...! முதுகுல நாலு குத்து...!! பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர பெற்றோர்கள் கொடுக்கும் ராஜ வைத்தியம் இதுதான். ஆனால், பெற்றோரின் இந்த தண்டனை மனப்பான்மையால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே பழாகிவிடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.

நியூ ஹம்ஷையர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முதன்மை விஞ்ஞானி முர்ரே ஸ்டரஸ் தலைமையிலான குழு, பெற்றோரால் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகள் என்ற ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இதற்காக 1,500 பிள்ளைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பாதி பேர் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்டவர்கள். மற்றவர்கள் 5 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவர்களில் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகளுக்கு, மற்ற பிள்ளைகளை விட அறிவுக்கூர்மை குறைவாக இருப்பது தெரிய வந்தது. உதை வாங்கும் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட அறிவுக்கூர்மை 5 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், 4 முதல் 9 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் அறிவுக்கூர்மை 2.8 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பெற்றோர்களை பிள்ளைகளை அடித்து வளர்ப்பதைவிட அன்பால் அரவணைத்து வளர்ப்பதே சிறந்தது.

- நன்றி/தினகரன்.காம்

Sunday, September 20, 2009

ரமளான் துஆ - பிறை 30

Ramadan Dua: DAY 30
supplication
O ALLAH, on this day, make my fasts worthy of appreciation and acceptance, according to what pleases You, and pleases the Messenger, the branches being strengthened by the roots, for the sake of our leader, Muhammad, and his purified family. Praise be to ALLAH, the Lord of the worlds.

Sunday, September 13, 2009

கூத்தாநல்லூர் ஜமாஅத் ஆம்புலன்ஸ் விபத்து; ஒருவர் மரணம் - ஓட்டுனர் படுகாயம்

நமது கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் அவசர தேவைக்காக 13 ஆண்டு்கள் தொடர்ந்து மருத்துவ சேவைபுரிந்து வந்த நமதூர் ஜமாஅத் ஆம்புலன்ஸ் (SWARAJ MAZDA) விபத்துக்குள்ளாகியது. இது குறித்த விரிவான செய்தித் தொகுப்பு-

கடந்த 08-09-2009 (செவ்வாய்) மாலை 6.00 மணிக்கு திருவாரூரிலிருந்து ஒரு அவசர சிகிச்சை பிரிவு நோயாளியை சென்னையிலுள்ள விஜயா மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துவிட்டு இரவு 10.00 மணிக்கு ஊர் நோக்கி ஆம்புலன்ஸ் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் கடலூர் - சிதம்பரம் சாலையில் சுமார் 30கி.மீ தொலைவிலுள்ள கொத்தட்டை என்னும் ஊர் அருகில் வந்து கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகியது.

விபத்துக்கான காரணம் :
(09-09-2009) சுமார் அதிகாலை 3.30 மணியளவில் ஆம்புலன்ஸ் கடலூர் - சிதம்பரம் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது அதன் பின்னால் வந்த லாரி அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்து கொண்டிருக்கும் போது, அதே சமயத்தில் எதிரே வந்த காருக்கு வழிவிடுவதற்காக நமது ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இடது பக்கமாக ஒதுங்கிய போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த புளியமரத்தில் மோதி சேதமடைந்தது.

உதவிக்காக சென்றவர் மரணம், ஓட்டுனருக்கு கால் முறிவு :
பொதுவாக வெளியூர் சார்ந்த நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ் செல்லும் போது ஓட்டுனருடன் ஒரு நபர் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுப்புவது வழக்கம். எனவே நமது ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அப்துல் முஹம்மது மற்றும் அவருக்கு உதவியாக முஹம்மது ஜின்னா ஆகியோர் சென்றனர்.

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் வந்த லாரி மற்றும் எதிரே வந்த காருக்கு வழிவிட இடப்பக்கம் ஒதுங்கிய ஆம்புலன்ஸ் சாலையோர புளியமரத்தில் மோத, ஓட்டுனர் அப்துல் மற்றும் அருகே அமர்ந்திருந்த ஜின்னா படுகாயமுற்றனர். உடனே 108 ஆம்புலன்ஸ் சேவை பிரிவிற்கு தகவல் கொடுத்தனர். அவர்களை விபத்திற்குள்ளான ஆம்புலன்ஸிலிருந்து மீட்ட 108ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் அதிகாலை 3.50 மணியளவில் அல்அமான் இயக்க நிர்வாகி ஜனாப். முஹம்மது ரபீயுதீன் அவர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே ஜின்னா (உதவிக்காக சென்றவர்) உயிரிழந்தார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) ஓட்டுனருக்கு வலதுகால், இடுப்பு, தலை போன்ற இடங்களில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடவடிக்கை:
செய்தியறிந்த ஒருசில மணிகளில் அல்அமான் இயக்க கௌரவ ஆலோசகர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் விபத்து நடந்த பகுதி பரங்கிப்பேட்டை காவல் சரக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு, விபத்தில் உயிரிழந்தவரின் உடலை எடுத்துக் கொண்டு சுமார் மாலை 6.00 மணிக்கு ஊர் வந்து சேர்ந்தனர். அதன்பின் இறந்தவரின் உடல் அன்றிரவே (09-09-2009) 7.30 மணிக்கு சின்னப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பொது சேவையில் பேரிழப்பு:
அல்அமான் இயக்கத்தின் 18 ஆண்டு கால பொது சேவையிலும், இவ்வியக்கத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த நமதூர் ஜமாஅத் ஆம்புலன்ஸின் 13 வருட மருத்துவ சேவையிலும் இவ்விபத்து ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். மேலும் உதவிசெய்ய வந்து விபத்தில் இறந்த சகோதரர் ஜின்னா அவர்களின் குடும்பத்திற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவருடைய மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஆச் செய்கிறோம்.

இந்த எதிர்பாராத விபத்து நமதூர் மக்களுக்கு பேரதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கின்றது. இருப்பினும் நமதூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலரது உயிர்களை காத்த நமதூர் ஜமாஅத் ஆம்புலன்ஸ், இனியும் தொடர்ந்து பலரது உயிர்களை காக்க இறைவனின் நாட்டத்தினாலும், நமதூர் மக்களின் முயற்சியாலும் சேவையை விரைவில் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

விபத்திற்குள்ளான ஆம்புலன்ஸ் புகைப்படங்கள்:







தகவல் - ஜனாப். P.M.A. முஹம்மது ரபீயுதீன்
(நிர்வாகி, அல்-அமான் இளைஞர் இயக்கம்)

Saturday, September 12, 2009

திருவாரூரில் செப்.19-ல் மத்திய பல்கலை. தொடக்கம்: உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் வருகிற 19 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது என்றார் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில், திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத் தொடக்க விழா திருவாரூரில் செப். 19-ம் தேதி நடைபெறவுள்ளது.

விழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் பொன்முடி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: திருவாரூரில் 516 ஏக்கரில் அமையவுள்ள மத்தியப் பல்கலைக்கழகம் நிகழாண்டிலேயே மாணவர் சேர்க்கையுடன் செப். 19ஆம் தேதி தொடங்குகிறது. இதன் தொடக்க விழாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி தலைமை வகிக்கிறார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் பல்கலைக்கழகத்தைத் தொடக்கி வைக்கிறார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பாடப் பிரிவுகளைத் தொடக்கிவைக்கிறார். விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இது தமிழக உயர் கல்வி வரலாற்றில் ஒரு மைல் கல் எனக் கூறலாம்.

தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தில் மொழிப் பாடங்களாக முதுநிலைத் தமிழ், முதுநிலை ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன. படிப்படியாக ஒருங்கிணைந்த பட்டம், பட்டயம் உள்ளிட்ட பல்வேறு பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

பல்கலைக்கழகத்துக்கு முதல்கட்டமாக, மத்திய அரசு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இடங்கள் முழுமையாக ஒப்படைக்கப்பட்டவுடன், அங்கு கட்டடங்கள் கட்டத் தேவையான அளவு நிதி ஒதுக்க மத்திய அரசு தயாராகவுள்ளது. புதிதாகக் கட்டப்படவுள்ள பல்கலைக்கழக வளாகம் பசுமை நிறைந்த சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் பகுதியாக, அதிக அளவில் மரங்கள் கொண்ட பகுதியாக இருக்கும் வகையில் அமைய திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் பொன்முடி.

தொடக்க விழாவுக்கென அமைக்கப்பட்டு வரும் விழா பந்தல், தாற்காலிகமாக பல்கலைக்கழகம் செயல்படவுள்ள ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம் மற்றும் பல்கலைக்கழகத்துக்கென நீலக்குடியில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது மாநில பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.பி. சஞ்சய், நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன், மாநில உயர் கல்வித் துறைச் செயலர் கணேசன், திமுக மாவட்டச் செயலர் பூண்டி. கே. கலைவாணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவின்குமார் அபினபு, திருவாரூர் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர். சங்கர், திமுக ஒன்றியச் செயலர் ஆர்.பி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

- Thanks / Dinamani.com

Monday, September 7, 2009

வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்காக நல நிதி

துபாய், சவூதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் அங்கு திடீரென்று ஏற்படும் இன்னல்களை சமாளிக்க மத்திய அரசு இந்தியர்கள் நலநிதியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேடு, சவூதி அரேபியா, கத்தார், மலேசியா, ஏமன், சூடான், சிரியா, இந்தோனேசியா, லெபனான், தாய்லாந்து, மாலத்தீவு மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் எதிர்பாராதவிதமாக பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. போலி விசா காரணமாக வெளிநாடுகளில் தவிப்பது, தங்களது நிர்வாகத்திடம் இருந்து உரிய சம்பளம் கிடைக்காமல் அல்லல்படுவது, வீட்டு வேலையின் கொடுமை காரணமாக ஓடிவிடுவது, தங்குமிடம் மற்றும் தரமான மருத்துவ வசதி கிடைக்காமல் இருப்பது, வேலை பிடிக்காமல் சொந்த ஊருக்கும் திரும்பி வரமுடியாமை, பணியின் போது இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டு வர கம்பெனிகள் ஓத்துழைப்பு அளிக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் வசிக்கும் நண்பர்கள், தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் உதவிக்காக கையேந்தி நிற்கும் நிலை உள்ளது.

இவ்வாறு தவிப்பவர்களை மீட்க இந்திய அரசு தனி நிதி ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை தொடர்ந்து மத்திய அரசு இந்தியர்கள் நலநிதி என்ற பெயரில் நிதியை உருவாக்கியுள்ளது. இதற்கு முதல் கட்டமாக ரூ.4 கோடியே 80 லட்சத்தை மத்திய அரசு ஓதுக்கீடு செய்துள்ளது. அத்துடன் பல்வேறு வழிகளில் நன்கொடை பெற்று நிதியை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

16 நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் இதற்காக தனி மிஷன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மிஷன் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் நிம்மதியடைந்துள்ளனர்.

- நன்றி/தட்ஸ்தமிழ்.காம்

Wednesday, September 2, 2009

Tuesday, September 1, 2009

தன்னிச்சையாக செயல்படும் ஆணையரை கண்டித்து உறுப்பினர்கள் போராட்டம் - நகராட்சி கூட்டம் பாதியில் முடிந்தது

நமது இணையதளத்தின் புதிய சேவை அறிமுகம்!

நமது அன்பான நேயர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தங்களின் மேலான வரவேற்புடன் நமது இணையதளத்தில் இதுவரை இடம்பெற்றிருந்த Chat Room பகுதி பலரது தனிப்பட்ட கருத்து பரிமாற்றத்திற்கு சரியான ஊடகமாக இருந்து வந்தது.

எனினும், எங்களின் இச்சேவை பலருக்கு பயனுள்ளதாக இருந்த போதிலும், இதனை யாரும் தவறாக பயன்படுத்தி எந்தவொரு தனிமனிதருக்கும் எவ்வித மனவேதனையையோ அல்லது இழப்பையோ ஏற்படுத்திவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இச்சேவையை நாங்கள் கடந்த சில நாட்களாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தோம்.

மேலும், இந்த Chat பகுதியை 24 மணிநேரமும் கண்காணிக்கவும், மட்டுப்படுத்தவும் போதிய கால அவகாசம் இல்லாமையினால் இதனை முழுவதுமாக நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக நமது பெரும்பாலான நேயர்களின் ஆலோசனையுடன் Buy / Sale என்ற பயனுள்ள பகுதியை அறிமுகப்படுத்துகின்றோம்.

இப்பகுதியில் வீடு, மனை, கார், பைக், செல்போன் அல்லது தங்களின் சொந்த தயாரிப்புகள் போன்ற எதுவாயினும் வாங்க அல்லது விற்க இலவசமாக பதிவு செய்யுங்கள்! அவை இணையதள குழுவின் பார்வைக்குப் பின்னர் இடம்பெறும்.

இந்த இலவச சேவை வாங்குபவரையும் விற்பவரையும் அறிமுகம் மட்டுமே செய்துவைக்கின்றது. மற்றபடி தாங்கள் வாங்கும் அல்லது விற்கும் பொருட்களின் முழு பொறுப்பு தங்களுடையதே! எங்களின் இணையதளம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது.

எங்களின் இம்முயற்சிக்கு தாங்கள் எப்போதும் போல் ஆதரவையும் முழு ஒத்துழைப்பையும் தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் பேராதரவுடன்...
www.koothanallur.co.in

Blog Archive