::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Thursday, June 4, 2009

எஸ்.எஸ்.எல்.சி உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் உடனடியாக தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஓ.எஸ்.எல்.சி. மற்றும் ஆங்கிலோ இந்தியன் பொதுத் தேர்வில் தோல்வியடைந்த (அதிகபட்சம் 3 பாடங்கள் வரை) மாணவர்கள் உடனடித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதலாம் என பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

இந்த உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் (ஜூன் 5) நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Blog Archive