திருவாரூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 3 சதவீத வட்டியில் கல்வி கடன் வழங்கப்படவுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.
இதுகுறித்து ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆண்டுக்கு ரூ. 50,000 என ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.2.50 லட்சம் வரையில் கடன் வழங்கப்படும். பயனாளிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சி மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ.39,500 மற்றும் நகர்ப்புறமாக இருந்தால் ரூ.54,500 இருக்க வேண்டும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மருத்துவம், பொறியியல், தொழில்கல்வி மற்றும் இதற்கு ஈடான சிறப்பு தொழில் மற்றும் பயிற்சி கல்விகள் பயில வேண்டும்.
இக்கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் பங்கு 90 சதவீதம் மற்றும் மாநில கழகத்தின் பங்கு 10 சதவீதம் ஆகும். இக்கடன் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்படுகிறது.
மேலும் வழிமுறைகள் மற்றும் கடன் மனு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆண்டுக்கு ரூ. 50,000 என ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.2.50 லட்சம் வரையில் கடன் வழங்கப்படும். பயனாளிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சி மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ.39,500 மற்றும் நகர்ப்புறமாக இருந்தால் ரூ.54,500 இருக்க வேண்டும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மருத்துவம், பொறியியல், தொழில்கல்வி மற்றும் இதற்கு ஈடான சிறப்பு தொழில் மற்றும் பயிற்சி கல்விகள் பயில வேண்டும்.
இக்கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் பங்கு 90 சதவீதம் மற்றும் மாநில கழகத்தின் பங்கு 10 சதவீதம் ஆகும். இக்கடன் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்படுகிறது.
மேலும் வழிமுறைகள் மற்றும் கடன் மனு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.