கூத்தாநல்லூர் ஜாமியா பெண்கள் தொடக்கப் பள்ளியில் இலவச இருதய நோய் பரிசோதனை முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
குவைத்தில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை, துபையில் உள்ள கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் அமைப்பு, சிங்கப்பூரில் உள்ள கூத்தாநல்லூர் ஜமாத், மலேசியாவில் உள்ள மலேசியன் கூத்தாநல்லூர் ஜமாத் மற்றும் சென்னை பில்ரோத் மருத்துவமனை இணைந்து இந்த மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
முகாமுக்கு கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சிகாபுதீன் தலைமை வகித்தார். பில்ரோத் மருத்துவமனையின் முதன்மை இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். தியாகராஜமூர்த்தி தலைமையில் 5 மருத்துவர்கள் மற்றும் 30 மருத்துவப் பணியாளர்கள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த முகாம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. இந்த முகாமின் மூலம் நமதூரைச் சார்ந்த 550க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர். முகாமின் இறுதியில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக முகாம் நிறைவு கூட்டம் நடைபெற்றது. முகாமை கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் ஒருங்கிணைத்து நடத்தியது.
முகாம் புகைப்படங்கள்:
குவைத்தில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை, துபையில் உள்ள கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் அமைப்பு, சிங்கப்பூரில் உள்ள கூத்தாநல்லூர் ஜமாத், மலேசியாவில் உள்ள மலேசியன் கூத்தாநல்லூர் ஜமாத் மற்றும் சென்னை பில்ரோத் மருத்துவமனை இணைந்து இந்த மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
முகாமுக்கு கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சிகாபுதீன் தலைமை வகித்தார். பில்ரோத் மருத்துவமனையின் முதன்மை இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். தியாகராஜமூர்த்தி தலைமையில் 5 மருத்துவர்கள் மற்றும் 30 மருத்துவப் பணியாளர்கள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த முகாம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. இந்த முகாமின் மூலம் நமதூரைச் சார்ந்த 550க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர். முகாமின் இறுதியில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக முகாம் நிறைவு கூட்டம் நடைபெற்றது. முகாமை கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் ஒருங்கிணைத்து நடத்தியது.
முகாம் புகைப்படங்கள்: