::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Tuesday, February 7, 2012

தங்கள் பேராதரவிற்கு நன்றி!

நமதூரின் பாரம்பரியமிக்க ஜஷ்ன மீலாது சொஸைட்டியினரால் நடத்தப்பட்ட 62வது தொடர் மீலாது விழா ஸீரத் மாநாடு ரபியுல்அவ்வல் பிறை 12 (05-12-2012) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் 01:45 மணி வரையிலும் - மாலை 3:30 மணி முதல் 6:30 மணிவரையிலும் - இரவு 9:00 மணிமுதல் 12:00 மணி வரையிலும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றது. அத்துடன் அந்நிகழ்வு நமது இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பு (Exclusive Live!) செய்யப்பட்டது. நேரடி ஒளிபரப்பை உலகம் முழுவதிலிருந்தும் நூற்றுக் கணக்கானோர் ‌கண்டுகளித்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் ஜஷ்ன மீலாது ஸீரத் மாநாட்டை குறிப்பிட்ட நேரத்தில் Online Live! நேரடியாக காண வாய்ப்பு இல்லாதோருக்காக www.koothanallur.co.in/live.htm என்ற முகவரியில் சென்று Recorded Live! பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சியினை எந்நேரமும் காண வசதி செய்யப்பட்டுள்ளது.

நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியினை கண்டுகளித்த அனைத்து கூத்தாநல்லூர் வாசிகளுக்கும், தொலைபேசியின் மூலம் பாராட்டு தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி! மேலும் இனிவரும் காலங்களில் நமதூரில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளை (சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் விரும்பினால்) நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளோம் என்பதை தங்களுக்கு அறிய தருகின்றோம்.

நன்றியுடன்... www.koothanallur.co.in - Team

No comments:

Blog Archive