கூத்தாநல்லூர் பெரியப்பள்ளிவாயில் அருகிலிருந்த பழமைவாய்ந்த மிராசுதார் சங்க ஓட்டுக் கட்டிடம் மிகவும் வழுவிழந்து காணப்பட்டதால் அதனை இடித்துவிட்டு புதிதாக காண்கிரீட் கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான செலவீனங்கள் ஆராயப்பட்டு, ரூ.10 லட்சத்தில் சிறப்பாக கீழ்தளம் 1000 சதுர அடியில் கட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.
மேற்காணும் ரூ.10 லட்சத்தை நன்கொடையாக அல்ஹாஜ். K.A.பரக்கத்துல்லாஹ் (துணை தலைவர், கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில்) அவர்கள் அளிக்க முன்வந்தார்கள். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க இவ்வரங்கத்திற்கு “பரக்கத்துல்லாஹ் - மெஹர்நிஸா ஹால்” எனப் பெயரிட்டு கடந்த (10-1-2011) திங்கள் மாலை 5-00 மணியளவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இக்கட்டித்திற்கு கடந்த 10 மாதமாக கட்டிட நிர்மான பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு நேற்று (11-11-11) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பின் திறப்புவிழா நடைபெற்றது. தரமாக கட்டிடம் உருவாக 10 மாதம் எடுத்துக் கொண்டாலும் கருவில் உருவான 10 மாத அழகு குழந்தையாக இக்கட்டிடம் இன்று காட்சியளிக்கின்றது. கட்டிடத்தை வக்பு செய்த அல்ஹாஜ். K.A.பரக்கத்துல்லாஹ் (துணை தலைவர், கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில்) அவர்களையும் அவரது துணைவியாரையும், கட்டிடம் உருவாக நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருந்த அனைவரையும் நமது ஊர் மக்களின் சார்பிலும், நமது இணையதளத்தின் சார்பிலும் மனமார பாராட்டுகின்றோம்.
பல நூறு ஆண்டுகால வரலாற்றில் இடம்பெறப்போகும் இக்கட்டிடம் பற்பல நற்காரியங்களுக்கு இடமளித்து உதவவும், நமதூரின் வளர்ச்சிப் பணியில் முக்கிய பங்களிக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்.
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:
மேற்காணும் ரூ.10 லட்சத்தை நன்கொடையாக அல்ஹாஜ். K.A.பரக்கத்துல்லாஹ் (துணை தலைவர், கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில்) அவர்கள் அளிக்க முன்வந்தார்கள். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க இவ்வரங்கத்திற்கு “பரக்கத்துல்லாஹ் - மெஹர்நிஸா ஹால்” எனப் பெயரிட்டு கடந்த (10-1-2011) திங்கள் மாலை 5-00 மணியளவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இக்கட்டித்திற்கு கடந்த 10 மாதமாக கட்டிட நிர்மான பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு நேற்று (11-11-11) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பின் திறப்புவிழா நடைபெற்றது. தரமாக கட்டிடம் உருவாக 10 மாதம் எடுத்துக் கொண்டாலும் கருவில் உருவான 10 மாத அழகு குழந்தையாக இக்கட்டிடம் இன்று காட்சியளிக்கின்றது. கட்டிடத்தை வக்பு செய்த அல்ஹாஜ். K.A.பரக்கத்துல்லாஹ் (துணை தலைவர், கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில்) அவர்களையும் அவரது துணைவியாரையும், கட்டிடம் உருவாக நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருந்த அனைவரையும் நமது ஊர் மக்களின் சார்பிலும், நமது இணையதளத்தின் சார்பிலும் மனமார பாராட்டுகின்றோம்.
பல நூறு ஆண்டுகால வரலாற்றில் இடம்பெறப்போகும் இக்கட்டிடம் பற்பல நற்காரியங்களுக்கு இடமளித்து உதவவும், நமதூரின் வளர்ச்சிப் பணியில் முக்கிய பங்களிக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்.
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்: