திருவாரூர் மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் நலத் திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் இதுவரை 442 பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டு அடையாள அட்டைகள் பெற்றுள்ளனர். இந்த வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்ட உதவிகளின் விவரம் அடையாள அட்டையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, கண் கண்ணாடி, ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகியவற்றை மட்டும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரே உடனுக்குடன் ஒப்பளிப்பு செய்யும் வகையில் இம் மாவட்டத்துக்கு இதுவரை ரூ. 87,500 ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரையில் 4 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 7,000 வழங்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்காணும் அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள் தகுதியான நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
மேலும், இந்த வாரியத்தில் இதுவரை பதிவு செய்யாத நபர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மற்றும் தஞ்சையில் உள்ள மாவட்ட வக்பு வாரிய ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று முழுமையான சான்றுகளுடன் விண்ணப்பித்து வாரியத்தில் உறுப்பினராகிப் பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- நன்றி (தினமணி.காம்)
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் இதுவரை 442 பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டு அடையாள அட்டைகள் பெற்றுள்ளனர். இந்த வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்ட உதவிகளின் விவரம் அடையாள அட்டையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, கண் கண்ணாடி, ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகியவற்றை மட்டும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரே உடனுக்குடன் ஒப்பளிப்பு செய்யும் வகையில் இம் மாவட்டத்துக்கு இதுவரை ரூ. 87,500 ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரையில் 4 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 7,000 வழங்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்காணும் அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள் தகுதியான நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
மேலும், இந்த வாரியத்தில் இதுவரை பதிவு செய்யாத நபர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மற்றும் தஞ்சையில் உள்ள மாவட்ட வக்பு வாரிய ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று முழுமையான சான்றுகளுடன் விண்ணப்பித்து வாரியத்தில் உறுப்பினராகிப் பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- நன்றி (தினமணி.காம்)