::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Friday, December 31, 2010

இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்துவது தமிழகம் முழுவதும் விரிவாக்கம்

ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி கடந்த 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், பலருக்கு இணைய தளத்தில் மின் கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் தெரிவதில்லை.

இதுகுறித்து
, வெளியிட்டுள்ள அறிக்கை: www.tneb.in என்ற இணைய தளத்தில் சென்று, billing services என்ற தலைப்புக்குள் online bill payment என்ற உபதலைப்பை கிளிக் செய்து மின்கட்டண நுழைவாயில் (internet payment gateway) படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து மின்கட்டணத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி பண அட்டை மூலமாகவோ, அனைத்து மாஸ்டர்/விசா கடன் அட்டைகள் மூலமாகவோ இந்த இணைய தளத்தில் செலுத்தலாம் . இணைய தள வணிக சேவை மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஆக்சிஸ், ஐசிஐசிஐ, சிட்டி யூனியன், ஐஓபி, இந்தியன் வங்கிகளில் உள்ளது.

வீடு மற்றும் கடைகளுக்கான மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கான வசதியை மேலும் சில வங்கிகளுக்கு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பு: குறைந்த அழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தமிழகம் முழுதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ, இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கனரா வங்கிகள் மூலம் மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த முடியும். மேலும் கூடுதலாக பல வங்கிகளை இத்திட்டத்தில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே
, மின்கட்டணத்தை www.tneb.in என்ற இணையதளம் மூலம் நுகர்வோர்கள் எளிதில் கட்டலாம்.

Tuesday, December 28, 2010

உலமாக்கள் நல வாரியத்தில் உதவிகள் பெற அழைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் நலத் திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் இதுவரை 442 பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டு அடையாள அட்டைகள் பெற்றுள்ளனர். இந்த வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்ட உதவிகளின் விவரம் அடையாள அட்டையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, கண் கண்ணாடி, ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகியவற்றை மட்டும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரே உடனுக்குடன் ஒப்பளிப்பு செய்யும் வகையில் இம் மாவட்டத்துக்கு இதுவரை ரூ. 87,500 ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரையில் 4 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 7,000 வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்காணும் அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள் தகுதியான நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

மேலும், இந்த வாரியத்தில் இதுவரை பதிவு செய்யாத நபர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மற்றும் தஞ்சையில் உள்ள மாவட்ட வக்பு வாரிய ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று முழுமையான சான்றுகளுடன் விண்ணப்பித்து வாரியத்தில் உறுப்பினராகிப் பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

- நன்றி (தினமணி.காம்)

Thursday, December 16, 2010

மேல் சபை வாக்காளர் பட்டியல் சேர நாளை கடைசி நாள் (டிசம்பர் - 17)

தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் இரண்டு பிரிவில் உள்ளவர்களே வாக்களிக்க முடியும். யாரெனில் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள்.

தமிழக அரசின் மேல் சபைக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாச்சியர் அலுவலகங்களில் சென்று சரிபார்த்துகொள்ளலாம். இதில் விடுபட்டவர்கள், மேலும் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர் நீடாமங்கலம்
வட்டாச்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 17 வரை விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர்பட்டியல் விரைவில் வெளியிடப்படும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும். உங்களுக்கு தெரிந்த நமதூர் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருந்தால் இந்த தகவலை தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

எங்கு விண்ணப்பிப்பது?
நீடாமங்கலம் வட்டாச்சியர் அலுவலகம்

எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்கள் விநியோகிப்படும் மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். http://www.elections.tn.gov.in/tnmlc/FORM18TAMIL.pdf
இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்து நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப ப‌டிவத்துடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்:

1. பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )
2. குடும்ப அட்டை (Ration Card) அல்லது ஓட்டுனர் உரிமம் (Driving Licence)
3. வேறு முகவரியில் வசிப்பின் வீட்டு வாடகை ரசீது (அல்லது) இருப்பிடச் சான்றிதழ்

மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம். சான்றிதழை நகல் (Xerox copy) எடுத்து Self Attested செய்து சமர்பித்தால் போதும். ஆனால் ஒரிஜினல் சர்டிபிகேட்டை அதிகாரி சரிபார்க்க உடன் எடுத்து செல்வது அவசியம்.

மேலும் விபரங்கள் நமதூருக்கான நீடாமங்கலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் (Ph: 04367 260456) அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.html தெரிந்துகொள்ளலாம்.

Blog Archive